தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியமன நாடாளுமன்ற எம்.பி. ஐந்து பேர் விண்ணப்பம்

1 mins read
9ad9520c-0ff9-4fbe-b53b-2f79b30357f9
-

சுற்­றுச்­சூ­ழல், கலை­கள் சமூ­கத்­தைச் சேர்ந்த ஐந்து பேர் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக விண்­ணப்­பித்து இருக்­கி­றார்­கள்.

'ஃபோரம் ஃபார் த ஃபியூச்சர்' அமைப்­பைச் சேர்ந்த திரு­வாட்டி மது­மிதா அர்த்­த­நாரி; 'சாய்ல் சோஷி­யல்' என்ற அமைப்பை நிறு­விய திரு­வாட்டி ஜேடன் ஓங்; உணவு மானு­ட­வி­யல் வல்­லு­நர் திரு­வாட்டி நித்யா லைலா; தேனீ வளர்ப்­பா­ளர் திரு சேவி­யர் டான், நாடக நடி­க­ரும் கலைப் போத­க­ரு­மான திரு­வாட்டி நூர்­லினா முகம்­மது ஆகி­யோரே அந்த ஐவர்.

நாடா­ளு­மன்­றத்­தில் மொத்­தம் ஒன்­பது நிய­மன உறுப்­பி­னர்­கள் இருக்க முடி­யும். அவர்­களின் பத­விக்­கா­லம் இரண்டரை ஆண்­டு­கள்.

விண்­ணப்­பக் கால அவ­கா­சம் ஏப்­ரல் 19ஆம் தேதி மாலை 4.30 மணி­யு­டன் முடி­வ­டை­யும்.

நாடா­ளு­மன்ற நாய­கர் தலை­மை­யி­லான சிறப்பு தேர்­வுக் குழு தகு­தி­யுள்ள வேட்­பா­ளர்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­கும்.