மூளை பாதிக்கப்பட்ட இந்தோனீசியப் பணிப்பெண் சரிப்பா ஃபிட்ரியானி, சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்காக அவரது முதலாளி நடியா அரினா முகம்மது சாலேஹுடின், 12 நாள்களில் 160,000 வெள்ளி திரட்டியிருந்தார். இந்தப் பணம் அவரது சிகிச்சைக்கும் திருப்பி அனுப்பவும் பயன்படுத்தப்படவிருக்கிறது.
கடந்த மார்ச் 5ஆம் தேதி நடியாவின் பாசிர் ரிஸ் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 3வது மாதத்திலேயே சரிப்பா தலை வலிப்பதாகவும் வாந்தி வருவதாகவும் கூறி நிலைகுலைந்தார்.

