இரு வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முன்னாள் உரிமையாளர்கள்மீது சட்டவிரோதமாக 470க்கு மேற்பட்ட 'சிம்' அட்டைகளைப் பதிவு செய்ததன் தொடர்பில் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
டான் கோங் சியே, செரீன் லிம் போ டின் இருவரும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும்.