நீடித்த நிலைத்தன்மை இலக்கு; புதிய திறன்களில் முதலீடு

2 mins read
a997698d-de55-4fca-b364-48200085a027
-

சிங்­கப்­பூர் அதன் நீடித்த நிலைத்­தன்மை இலக்­கு­களை அடைய புதிய திறன்­களில் முத­லீடு செய்­ய­வும் அதோடு பரு­வ­நிலை மிரட்­ட­லுக்கு எதி­ராக தாக்­குப்­பி­டிக்­கும் தன்­மையை வலுப்­ப­டுத்­த­வும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர்   தெரி­வித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பின் உரை மீதான பிற்சேர்க்கையில் தனது அமைச்­சின் திட்­டங்­களை அவர் முன்­வைத்­தார்.

கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைப்­பது, வேளாண்-உணவு உற்­பத்தி, நகர்ப்­புற வெப்­பத்­தைச் சமா­ளிப்­பது, கட­லோ­ரப் பகு­தி­களைப் பாது­காப்­பது உள்­ளிட்­ட­வற்­றில் ஆய்வு, மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­படும். இதற்­காக நிறு­வ­னங்­கள், உயர்­கல்வி நிலை­யங்­க­ளு­டன் அமைச்சு கைகோர்த்­துள்­ளது.

நீர்த்­தேக்­கங்­களில் சூரிய சக்தித் தக­டு­கள், பயன்­ப­டுத்­தப்­பட்ட நீர் மற்­றும் உண­வுக் கழிவை சுத்­தி­க­ரிக்க துவா­ஸில் உள்ள ஒருங்­கி­ணைந்த வச­தி­கள் போன்ற தொழில்­நுட்­பங்­கள் சோதிக்­கப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன என்றார் அவர்.

சிங்­கப்­பூர், 2050ஆம் ஆண்­டு­வாக்­கில் கரி­மக் கழிவை முற்­றி­லும் குறைக்க இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.

இந்த இலக்கை அடைய நிறு­வ­னங்­க­ளுக்­கும் வீடு­க­ளுக்­கும் கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைப்­ப­தற்­கான உத­வி­கள் சிங்­கப்­பூர் பசுமை திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­படும்.

எரி­சக்தி சேமிப்பு நிதி, பரு­வ­நி­லைக்கு உகந்த குடும்­பங்­க­ளுக்­கான திட்­டங்­கள் ஆகி­யவை அவற்­றில் சில.

தொழில் வச­தி­க­ளு­டன் கூடிய நிறு­வ­னங்­க­ளுக்கு கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைக்­கும் எரி­சக்தி சேமிப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த மானி­யம் வழங்­கப்­படும்.

மேலும் ஓரறை முதல் மூவறை வரை­யி­லான வீவக வீடு­களில் வசிப்­போ­ருக்கு எரி­சக்தி, தண்­ணீரை சேமிக்­கும் வீட்டு உப­யோ­கப் பொருள்­களை வாங்க மின்னி லக்­கப் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப் படும்.

கரிம வரி, டன்­னுக்கு ஐந்து வெள்­ளி­யி­லி­ருந்து 2030ஆம் ஆண்­டு­வாக்­கில் டன்­னுக்கு ஐம்­பது முதல் 80 வெள்ளி வரை உயர்த்­தப்­படும் என்­றும் அமைச்­சர் கிரேஸ் ஃபூ தெரி­வித்­தார்.

குறைந்த கரிம வெளி­யேற்­றத்­துக்கு மாறு­வ­தற்­கான திட்­டங்­களும் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

பொதுத் துறை­யின் பசுமை இலக்­கான கிரீன்­காவ்.எஸ்ஜி ( GreenGov.SG ) முயற்சி மூலம் 2045ஆம் ஆண்­டு­வாக்­கில் கரிம வெளி­யேற்­றத்தை முற்­றி­லும் குறைக்க பல்­வேறு திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­படும் என்று அமைச்­சர் மேலும் தெரி­வித்­தார்.

போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ர­னும் தமது அமைச்­சும் விதி­முறை, ஊக்­கு­விப்பு மூலம் தூய்­மை­யான எரி­சக்­தி­யில் இயங்­கும் வாக­னங்­களை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் என்றார்.

2040ஆம் ஆண்­டு­வாக்­கில் சாங்கி விமான நிலை­யத்­தில் அனைத்து வாக­னங்­களும் தூய்மை எரி­சக்­தி­யால் ஓடும். இல­கு­ரக வாக­னங்­கள் 2025ஆம் ஆண்டுவாக்கில் மின்­சா­ரத்­தில் ஓடுவதாக இருக்கும்.

பசுமை சார்ந்த போக்குவரத்­துக்கு சுமூ­க­மாக மாற விமா­னத் துறை, கடல்துறை ஆகி­ய­வற்­று­டன் போக்குவரத்து அமைச்சு சேர்ந்து செயல்­படும் என்­று அவர் கூறினார்.

நிலப் போக்­கு­வ­ரத்து பற்றியும் திரு ஈஸ்­வ­ரன் பேசினார்.

சிங்­கப்­பூ­ரின் ரயில் கட்­ட­மைப்பு அடுத்த பத்து ஆண்­டு­களில் 100 கி.மீட்­டரி­லி­ருந்து 360 கி.மீட்டருக்கு விரி­வு­ப­டுத்­தப்­ படும். அதாவது, பத்தில் எட்டு வீடுகளுக்கு பத்து நிமிட தொலைவில் ஒரு எம்ஆர்டி நிலையம் இருக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித் தார்.