நோன்புப் பெருநாளையொட்டி தொழுகை நேரங்கள் அதிகரிப்பு

நோன்புப் பெருநாளையொட்டி தொழுகை நேரங்கள் அதிகரிப்பு

1 mins read
6fdfdacf-58a0-4b87-ad59-75202aadd9cf
-

நோன்­புப் பெரு­நா­ளன்று தொழு­கைக்­காக அதி­க­மான முஸ்­லிம்­கள் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­வார்­கள் என்­ப­தால் தொழுகை நேரங்­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

முஸ்­லிம்­க­ளின் புனித மாத­மான ரம­லான் அடுத்த வாரம் முடி­வுக்கு வரு­கிறது. இவ்­வே­ளை­யில் நோன்­புப் பெரு­நாள் காலை பள்­ளி­வா­ச­லில் மூன்று வேளை வரை தொழு­கைக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­படி முஸ்­லிம்­கள் காலை 7.15 மணி, 8.45 மணி, 9.45 மணி ஆகிய நேரங்­களில் தொழு­கை­யில் பங்­கேற்­க­லாம்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள 68ல் 12 பள்­ளி­வா­சல்­களில் நோன்­புப் பெரு­நாளன்று காலை மூன்று வேளைகளில் தொழுகை நடத்­தப்­ப­டு­கின்­றன. 51 பள்­ளி­வா­சல்­களில் இரண்டு வேளை­யும் ஐந்து பள்­ளி­வா­சல்­களில் காலை 8.45 மணிக்கு ஒரு­வே­ளை­யும் தொழு­கைக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

முயிஸ் எனும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில், தொழு­கைக்­கான ஏற்­பா­டு­களை அறி­வித்­தது.

தொழு­கைக்கு மேலும் இரு­பது இடங்­கள் ஒதுக்­கப்­படுகின்­றன. இது பற்­றிய விவ­ரம் அடுத்த வாரம் அறி­விக்­கப்­படும். 68 பள்ளி­வா­சல்­க­ளி­லும் கூடு­தல் இரு­பது இடங்­க­ளி­லும் சேர்த்து 240,000 பேர் வரை தொழு­கை­யில் ஈடு­ப­ட­லாம்.

கொள்­ளை­நோய் காலத்­தில் அம­லாக்­கப்­பட்ட முன்­ப­திவு முறை, ஐந்து பள்­ளி­வா­சல்­க­ளைத் தவிர்த்து மற்ற பள்­ளி­வா­சல்­களில் நீக்­கப்­ப­டு­கிறது. அந்த ஐந்து பள்­ளி­வா­சல்­க­ளி­லும் காலை 7.15 மணி தொழு­கைக்கு மட்­டும் முன்­ப­திவு தேவைப்­படும்.

தாருல் குஃப்ரான், அல் மவத்தா, சலீம் மாத்தார், வாக் தஞ்சோங், யூசோஃப் இஷாக் ஆகியவை அந்த ஐந்து பள்ளி வாசல்கள். சிங்கப்பூரில் நோன்புப் பெருநாள் ஏப்ரல் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.