உற்சாகம் பொங்கும் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

உற்சாகம் பொங்கும் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

2 mins read
b49dd15c-189c-4af8-9bb3-73ef1e765502
-

மோன­லிசா

சித்­தி­ரைப் புத்­தாண்­டைப் புத்­து­ணர்ச்­சி­யு­டன் தொடங்­கும் தமி­ழர்­கள், வீட்­டைச் சுத்­தம் செய்து புத்­தாடை உடுத்தி குடும்­பத்­தி­ன­ரு­ட­னும் நண்­பர்­க­ளு­ட­னும் இணைந்து சுவை­யான உணவு உட்­கொண்டு அதை மகிழ்ச்­சி­யு­ட­னும் நம்­பிக்­கை­யு­ட­னும் இன, சமய பேத­மின்றி வர­வேற்று மகிழ்­கி­றார்­கள்.

"சித்­தி­ரைப் புத்­தாண்­டன்று கண­வர், மகள், மகன் என குடும்­ப­மா­கக் கோயி­லுக்கு சென்று வரு­வோம். பல உணவு வகை­க­ளோடு பிரம்­மாண்ட விருந்து தயா­ரித்து உற­வி­னர்­க­ளு­டன் உட்­கொள்­வது புத்­தாண்டை இன்­மு­கத்­தோடு வர­வேற்ற நிம்­ம­தி­ய­ளிக்­கும்," என்று கூறி­னார் குடும்­பத் தலை­வி­யான வள்­ளி­மீனா கண்­ணன், 42.

மேலும் சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வோர் ஆண்­டும் இம்­மா­தம் தமிழ்­மொழி மாத­மா­கக் கொண்­டா­டப்­ப­டு­வதே மாதம் முழுக்க கொண்­டாட்ட உணர்வை அளிக்­கும்.

"தற்­போது 18 வய­தா­கும் என் மக­ளை­யும் 14 வய­தா­கும் என் மக­னை­யும் சிறு வயது முதலே இம்­மா­தத்­தில் நடக்­கும் பல தமிழ் நிகழ்ச்­சி­க­ளுக்கு அழைத்து செல்­வேன். குறிப்­பாக தமிழ்ப் புத்­தாண்­டன்று தமிழ் நிகழ்ச்­சி­களில் பங்­கு­கொள்­வது மிகுந்த உற்­சா­கத்தை அளிக்­கும்," என்­றும் தெரி­வித்­தார்.

"சிறு வயது முதலே இந்த­தினத்­தில் வீட்­டி­லேயே நாங்­கள் சாமி அறையை அலங்­க­ரித்து தமிழ் பக்­திப் பாடல்­கள் பாடு­வோம். வீட்­டைச் சுத்­தம் செய்து, அலங்­க­ரித்து குடும்­பத்­தி­ன­ரு­டன் நேரத்தை செல­வ­ழிப்­பது மிகுந்த மகிழ்ச்­சி­ய­ளிக்­கும். இவ்­வாண்டு அதிக தமிழ்ப் புத்­த­கங்­கள் படிக்க வேண்­டும் என்ற தீர்­மா­ன­மும் எடுத்­துள்­ளேன்," என்று கூறி­னார் பல்­க­லைக்­க­ழக மாண­வி­யான ராஜ­தர்­ஷினி நெடு­மா­றன், 18.

"என் தாயா­ரின் பிறந்­த­நாள் தமிழ்ப் புத்­தாண்­டன்று வரு­வ­தால் ஒவ்­வோர் ஆண்­டும் இந்த­ தினம் எங்­கள் குடும்­பத்­தி­ன­ருக்கு இரட்­டிப்பு மகிழ்ச்சி தரும். தாயார், தந்தை, மூத்த சகோ­த­ரி­கள் என அனை­வ­ரும் ஒன்­றா­கக் கொண்­டாடி மகிழ்­வோம். சிங்­கப்­பூ­ரில் வாழும் தமிழ் குடும்­ப­மாக இந்த­தி­னத்தை வர­வேற்­ப­தில் மிகுந்த பெருமை கொள்­கி­றோம்," என்று கூறி­னார் ஆராய்ச்­சி­யா­ள­ரான 33 வயது ஷீனா ரம­சானு.

தன் மனைவி, இரண்டு மகன்­கள் என குடும்­பத்­தி­ன­ரு­டன் ஒவ்­வோர் ஆண்­டும் சித்­தி­ரைப் புத்­தாண்டை கொண்­டாடி வரு­கி­றார் கிறிஸ்­த­வ­ரான தமிழ்ச்­செல்­வன் பில­வேந்­தி­ரன், 50. தனி­யார் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரா­ன இவர், "பெரும்­பா­லும் தமிழ்ப் புத்­தாண்டு, இந்­துக்­கள் மட்­டுமே கொண்­டா­டும் பண்­டி­கை­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது. ஆனால், அது இன, சமய பேத­மின்றி உல­கில் உள்ள அனைத்­துத் தமி­ழர்­களும் கொண்­டாட வேண்­டிய பண்­டிகையாகும்," என்று கூறி­னார்.