பொருளியல் வளர்ச்சி வாய்ப்புகள் சரியில்லாத சூழல்: நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை

பொருளியல் வளர்ச்சி வாய்ப்புகள் சரியில்லாத சூழல்: நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை

2 mins read
8caecd49-d20c-4f58-887d-685995176edf
-

பொரு­ளி­யல் வாய்ப்­பு­கள் சரி­யில்லை. எதிர்பார்க்­கப்­பட்­ட­தை­விட பொரு­ளி­யல் அதி­க­மாக மெது­வ­டை­கிறது.

இந்­தச் சூழ­லில், தன்­னு­டைய நாண­யக் கொள்கையில் எந்த மாற்­றத்­தை­யும் செய்­ய­ா­மல் இப்­போ­தைய கொள்­கையே நீடிக்க சிங்­கப்­பூ­ர் நாணய ஆணையம் அனு­ம­தித்­து உள்­ளது.

ஆணை­யம் இது­வரை கொள்கையை இறுக்கதாக வைத்து இருந்தது. பண­வீக்கத்திற்கு எதி­ரான ஆயுதமாக அது சிங்கப்பூர் நாணயத்தை வலுப்­ப­டுத்தி வந்­தது. ஆனால், இப்­போது அது தனது ஒரு­மித்த கவ­னத்தை வேறு அம்சங்களில் திருப்பி இருக்­கிறது.

பொரு­ளியல் எதிர்­பார்க்­கப்­படுதை­விட மேலும் மெதுவடை­யக்­கூ­டிய ஆபத்தைத் தான் எதிர்­நோக்குவதாக ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூர் நாண­யத்­தின் நடப்பு பரி­வர்த்­தனை விகி­தத்தை தன்­னுடைய முக்கியக் கொள்கை ஆயு­த­மாக ஆணை யம் பயன்­ப­டுத்தி வரு­கிறது.

சிங்­கப்­பூர் நாண­யம் இப்­போது எந்த அள­வில் மதிப்பு கூடி வரு­கி­றதோ அதே அளவை அனு­ம­திக்­கப் போவ­தாக ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

ஆணை­யம் 2021 அக்­டோ­ப­ரில் தொடங்கி தொடர்ந்து ஐந்­தா­வது முறை­யாக நாண­யக் கொள்­கையை இறுக்கி சிங்­கப்­பூர் நாண­யம் மதிப்பு அதி­க­ரிக்க அனு­ம­தித்து வந்­தது.

அதேபோலவே, ஆற­ாவது முறையாக வும் ஆணை­யம் அதை­யே­தான் செய்யும் என்று தாங்­கள் எதிர்பார்ப்­ப­தாக தனியார் துறை பொரு­ளி­யல் வல்­லு­நர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் அண்­மைய ஆய்வு­களில் தெரி­வித்து இருந்­த­னர்.

அவர்­க­ளைப் பொறுத்­த­வரை ஆணையத்­தின் இப்­போ­தைய முடிவு அதிர்ச்சி அளிப்­ப­தாக இருக்­கிறது.

பொரு­ளி­யல் வாய்ப்­பு­கள் ஆபத்தில் இருப்­ப­தால் சிங்­கப்­பூர் நாண­யக் கொள்கைகளை மேலும் இறுக்கி நாண­யத்­தின் மதிப்பு மேலும் கூட அனு­ம­திக்க ஆணை­யம் இப்­போ­தைக்கு ஆயத்­த­மாக இல்லை. அப்­ப­டிச் செய்­தால் சிங்­கப்­பூ­ரின் ஏற்­று­ம­தி­கள் அதிக செலவு வைக்கக் கூடி­ய­வை­யாக ஆகி­வி­டும். இத­னால் பொரு­ளி­யல் பாதிக்­கப்­படும்.

இதே கார­ணத்­திற்­கா­கவே கனடா, இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா, தென்­கொரியா, இந்­தோ­னீ­சியா, மலே­சியா ஆகிய நாடு­களி­லும் அண்­மைய வாரங்­களில் இதே முடிவே எடுக்­கப்­பட்டு உள்­ளது.

ஆணை­யம் ஆண்­டுக்கு இரண்டு முறை தனது கொள்கை அறிக்­கையை வெளியிடும். சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி இந்த ஆண்டு குறை­வா­கவே இருக்­கும் என அதில் முன்­னுரைக்­கப்­ப­ட்டுள்ளது.

உலக வளர்ச்­சிக்­கான வாய்ப்­பு­கள் ஆபத்தை எதிர்­நோக்­கு­கின்­றன. இந்­தச் சூழ­லில் உள்­ளூர் பொரு­ளி­யல் வளர்ச்சி எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தை­விட மேலும் மெதுவ­டை­யக்கூடும்­ என்று ஆணை­யம் அறிக்­கை­யில் தெரி­வித்­து உள்­ளது.

ஆகையால், இப்போதைய நாணயக் கொள்கையைத் தான் நிலைநாட்டி வருவதாக ஆணையம் குறிப்பிட்டது.