நீதி கிடைக்க, நிதி வளம்பெற, எல்லாரையும் தழுவும் சமூகம் உருவாக அமைச்சுகள் திட்டம்

நீதி கிடைக்க, நிதி வளம்பெற, எல்லாரையும் தழுவும் சமூகம் உருவாக அமைச்சுகள் திட்டம்

2 mins read
8293ce38-9569-46b3-8ff5-445e9f60eb8a
-

பல­ரை­யும் உள்­ள­டக்­கக்­கூ­டிய சிங்­கப்­பூரை சாதிக்­க­வும் மக்­களின் நிதி வளத்­தைக் கட்­டிக்­காக்­க­வும் மக்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வும் தாங்­கள் நடை­முறை­ப­டுத்­தக்­கூ­டிய திட்­டங்­களைப் பற்றி அதி­பர் உரை பிற்­சேர்க்­கை­யில் அமைச்­சு­கள் கோடி­காட்டி இருக்­கின்­றன.

மேலும் பல­ரை­யும் உள்­ள­டக்­கும் வகை­யில் சமூ­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான யோசனை­களை முன்­னே­றும் சிங்­கப்­பூர் இயக்­கத்­தின் வழி­யாக சிங்­கப்­பூ­ரர்­கள் முன்­வைத்து இருக்­கிறார்­கள்.

சமூ­கத்­திற்­குத் தொண்டு செய்­யும் கலா­சா­ரத்­தைப் பேணி வளர்ப்­ப­தற்­கான கருத்­து­க­ளை­யும் யோச­னை­க­ளை­யும் அவர்­கள் தெரி­வித்து இருக்­கி­றார்­கள் என்று கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் கூறி இருக்­கி­றார்.

அவற்­றின் பேரில் அமைச்சு சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் சேர்ந்து செயல்­படும் என்­றார் அவர்.

அர­சாங்­கம் தன்­னு­டன் சேர்ந்து தேசிய அள­வி­லான பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண்­ப­தற்­கும் கொள்­கை­களை உரு­வாக்­கு­வ­தற்­கும் மக்­க­ளுக்கு வாய்­ப்பு­களை வழங்­கும் என்று அவர் கூறி­னார்.

பரி­வு­மிக்க, பிணைப்­பு­மிக்க, நம்­பிக்­கை­மிக்க நாட்டை பலப்­படுத்­து­வதே தமது அமைச்­சின் நோக்­கம் என்­றும் திரு டோங் குறிப்­பிட்­டார்.

ஒரு­வர் மற்­றொ­ரு­வர் மீது காட்­டும் பரிவை தம்­மு­டைய அமைச்சு மேம்­ப­டுத்­தும். அதை சிங்­கப்­பூர் கலா­சா­ரத்­தின் மிக முக்­கிய அங்­க­மாக ஆக்­கும்.

தொண்­டூ­ழி­யம், நன்­கொடைக்­கான வாய்ப்­பு­களை அர­சாங்­கம் உரு­வாக்­கும் என்று அமைச்­சர் குறிப்­பிட்டார்.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங், தம் அமைச்சு அர­சாங்க அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து பாடு­பட்டு சிங்­கப்­பூ­ரின் தேசிய முன்னு­ரி­மை­க­ளுக்கு ஆத­ர­வாக வளங்­களைப் பிரித்து­வி­டும் என்று தெரி­வித்­தார்.

இப்­போ­தைய, எதிர்­காலத் தலை­முறை சிங்­கப்­பூ­ரர்­க­ளின் விருப்­பங்­கள் நிறை­வேற ஆத­ரவு அளிக்­கும் வகை­யில், நாட்­டின் நிதி உத்­தி­களைச் சரிப்­ப­டுத்த விவே­க­மான, பொறுப்­புள்ள வழி­களில் வளங்­கள் ஒதுக்­கப்­படும் என்­றா­ர­வர்.

சிங்­கப்­பூர் அடுத்த கட்ட நாட்டு உரு­வாக்­கத்­திற்கு ஆயத்­த­மா­கிறது. இந்த நிலை­யில், அர­சாங்­கத்­தின் மீது அதிக நம்­பிக்­கையைக் கட்­டிக்­காப்­ப­தும் முக்­கி­ய­மா­னது.

சட்­டம் வலு­வாக நடப்­பில் இருந்து வர வேண்­டும்.

இது நம்­பிக்­கைக்­கு­ரிய அர­சாங்­கத்­தின் வலு­வான தூண்­களில் ஒன்று என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் தெரி­வித்­தார்.

பரி­ண­மித்து வரும் சமூகத் தேவை­க­ளைச் சமா­ளிக்­கும் வகை­யில் சட்டச் சீர்­தி­ருத்­தங்­க­ளைச் சாதிப்­ப­தற்­கான முயற்சி­களைச் சட்ட அமைச்சு தொடர்ந்து மேற்­கொள்­ளும் என்­றா­ர­வர்.

பலதரப்­புநிலை, விதி­முறை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அனைத்­துலக ஒழுங்கு­முறையை தமது அமைச்சு ஆத­ரிக்­கும் என்­ற அமைச்சர், மக்­க­ளுக்கு நீதி கிடைப்­ப­தற்­கான வழி­களை மேம்­ப­டுத்த முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு இருக்­கின்­றன என்­ப­தை­யும் சுட்­டிக்­காட்­டி­னார்.