பொய் சாட்சி சொன்ன கார்ல் லியூவுக்கு சிறை

பொய் சாட்சி சொன்ன கார்ல் லியூவுக்கு சிறை

2 mins read
a79ffc2b-6154-40d4-855f-52acc2c75c97
-

சாங்கி விமான நிலை­யக் குழு­மத்­தின் முன்­னாள் தலை­வர் லியூ மன் லியோங்­கின் மகன் கார்ல் லியூ­வுக்கு முந்­திய விசா­ர­ணை­யில் மாவட்ட நீதி­ப­தி­யி­டம் பொய் கூறி­ய­தற்­காக நேற்று இரண்டு வார சிறை விதிக்­கப்­பட்­டது. அவர்­க­ளின் வீட்­டில் திரு­டி­ய­தாக குற்­றம் சாட்­டப்­பட்ட குடும்­பத்­தின் முன்­னாள் பணிப்­பெண் திருவாட்டி பார்தி லியானி தொடர்­பு­டை­யது.

கார்ல் லியூ, 45, பொதுத் துறை ஊழி­ய­ரி­டம் தவ­றான தக­வலை வழங்­கிய குற்­றத்தை மார்ச் 30ஆம் தேதி ஒப்­புக்­கொண்­டார். இக்­குற்­றத்­தி­ற்கு ஈராண்டு வரை சிறை, அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

திரு­வாட்டி பார்தி, 49, திரு லியூ மன் லியோங் வீட்­டில் 2007ல் வேலையில் சேர்ந்தார். 2016 மார்ச் மாதம், வீட்டு வேலைகளுடன் வேறு இடத்­தில் இருந்த அலு­வ­ல­கத்­தை­யும் சுத்­தம் செய்­யு­மாறு பணிக்கப்பட்டதால் அவர் வருத்த­ம­டைந்தார்.

2016 அக்­டோ­பர் 28ஆம் தேதி பார்­தியை பணி­யிலிருந்து நீக்­கி­ய லியூ குடும்­பத்­தார், தமது உடை­மை­க­ளைப் பெட்­டி­களில் அடுக்க அவ­ருக்கு இரண்டு மணி­நே­ரம் கொடுத்தனர். இந்­தோ­னீ­சியா திரும்பும் ­முன்­ மனி­த­வள அமைச்­சில் புகார்செய்­யப் போவ­தாக பார்தி கூறி­னார். அந்­தப் பெட்­டி­களைக் கட்டணம் செலுத்தி தமக்கு கப்­ப­லில் அனுப்பி வைக்­கு­மா­று கார்ல் லியூவி­டம் பார்தி கேட்­டுக்­கொண்­டார்.

அவர் சென்­ற­தும் அவ­ரது பெட்­டி­களைத் திறந்த லியோ குடும்­பம், அவற்றில் சில தங்களு டை­யவை என்று காவல்துறையிடம் புகார் செய்தது. 2016 டிசம்­ப­ரில் சிங்­கப்­பூர் திரும்­பி­ய­ பார்தி கைது­செய்­யப்­பட்­டார். மாவட்ட நீதி­மன்­றத்­தில் அவர்மீது பல திருட்டுக் குற்­றங்கள் சாட்டப்பட்டன. மொத்­தம் $46,856 மதிப்­பு­டைய பொருள் களைத் திரு­டி­யது அதில் ஒன்று. அதில் ஒவ்­வொன்­றும் $150 மதிப்­புள்ள 120 பொருள்­கள் இருந்தன.

அதில் இருந்த வெளிர் நிற போலோ டி-சர்ட்­டும் சிவப்பு நிற பெண்­கள் சட்டை­யும் தம்­முடை­யவை என்று 2018 ஜூலை 17 அன்று கார்ல் லியூ பொய் சாட்­சி­யம் அளித்­தார்.

2019 மார்ச் 20 அன்று குற்­றச்­சாட்­டைத் திருத்தி, அதிலிருந்து டி-சர்ட், சிவப்புச் சட்டை உட்­பட ஐந்து ஆடை­களை நீதி­பதி லோ அகற்­றி­னார். அவை இரண்­டும் கார்ல் லியூ­வுக்­குச் சொந்­த­மா­னவை அல்ல என்­பதை நீதி­பதி கண்­ட­றிந்­தார்.

எனி­னும், $30,000க்கும் அதிக மதிப்­புள்ள பொருள்­க­ளைத் திரு­டி­ய­தாக குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்டு திருவாட்டி பார்திக்கு ஈராண்டு சிறை விதிக்­கப்­பட்­டது. ஆனால், உயர் நீதி­மன்­ற மேல்­மு­றை­யீட்டைத் தொடர்ந்து தம் மீது சுமத்­தப்­பட்ட அனைத்து குற்­றச்­சாட்­டு­களிலிருந்­தும் பார்தி விடு­விக்­கப்­பட்டார்.