மோட்டார்சைக்கிளோட்டி மரணம்; 89 வயது ஆடவர் கைது

மோட்டார்சைக்கிளோட்டி மரணம்; 89 வயது ஆடவர் கைது

1 mins read
8215c252-8734-4eb0-831d-facae737f1d9
-

கவ­னக்­கு­றை­வாக வாக­னம் ஓட்டி, மோட்­டார்சைக்­கிள் ஓட்­டுநரின் மர­ணத்­திற்கு கார­ண­மான 89 வயது முதி­ய­வர் வியாழக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

வியாழக்­கி­ழமை மாலை 6.45 மணி­ய­ள­வில் ஹாலந்து ரோடு - ஜாலான் ஜெலித்­தார் சந்­திப்­பில் காரும் மோட்­டார்­சைக்­கி­ளும் விபத்­துக்­குள்­ளா­ன­தாக தக­வல் வந்­த­தாக காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

சம்பவம் குறித்து மாலை 6.40 அளவில் தகவல் வந்ததாகவும் இரு­வர் தேசிய பல்­க­லைக்­கழக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாகவும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறியது.

மோட்­டார்சைக்­கிள் ஓட்­டு­நரான 30 வயது ஆட­வர் மயக்­க­மடைந்த நிலை­யில் மருத்­து­வ­மனைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டதாகவும் பின்­னால் அமர்ந்து சென்ற 30 வயது பெண் சுய­நினை­வு­டன் இருந்­த­தாக காவல்­துறை தெரி­வித்­தது. மோட்­டார்­சைக்­கி­ளோட்டி மருத்­து­வ­ம­னை­யில் உயி­ரி­ழந்­ததாகவும் அது கூறியது.

சம்பவம் குறித்து விசா­ர­ணை­ நடைபெற்று வருகிறது.