பிள்ளைகளுடன் பிணைப்பு: தந்தைக்கு உதவும் திட்டம்

பிள்ளைகளுடன் பிணைப்பு: தந்தைக்கு உதவும் திட்டம்

1 mins read
28b40723-1710-4361-8c82-eb997fe7b34c
-

அங் மோ கியோ­வில் வசிக்­கும் தந்­தை­யர், தங்­கள் பிள்­ளை­க­ளு­டன் அணுக்­க­மா­கப் பாசப்­பிணைப்பைப் பேணி வளர்க்க உத­வும் நோக்­கத்­து­டன் 'வாழ்க்­கைக்­குத் தந்தை' என்ற செயல்­திட்­டம் தொடங்­கப்­பட்டுள்ளது.

குடும்ப தினத்தை முன்­னிட்டு கெபுன் பாரு சமூக மன்­றத்­தில் நேற்று அந்­தச் செயல்­திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

அதில் பிர­த­மர் லீ சியன் லூங்­கும் ஏறக்­கு­றைய 1,500 குடி­யி­ருப்­பா­ளர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

தந்­தை­யர் தங்­கள் பிள்­ளை­களின் வாழ்­வில் நல்ல செல்­வாக்­கைச் செலுத்­தும் வகை­யில் தந்தை­யரை ஈடு­ப­டுத்தி, ஊக்­க­மூட்டி உரு­வாக்­கும் நோக்­கத்­தில் இடம்­பெ­றக்­கூ­டிய ஒரு தேசிய இயக்­க­மாக வாழ்க்­கைக்­குத் தந்தை செயல்­திட்­டம் உள்ளது.

பிள்­ளை­க­ளின் வாழ்­வில் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் தந்­தை­யின் தாக்­கம் மிக முக்­கி­ய­மா­னது என்­பதை கெபுன் பாரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹென்றி குவெக் நேற்று சுட்­டிக்­காட்­டி­னார்.

அந்த இயக்­கத்­தை­யொட்டி தந்­தை­யு­டன் காலை சிற்­றுண்டி, தந்தை-பிள்ளை அனு­பவ பயி­ல­ரங்­கு­கள் போன்ற பல நிகழ்ச்சி­க­ளுக்­கும் ஜூன் மாதம் முதல் ஏற்­பாடு செய்­யப்­படும்.

தற்­காப்­புக் கலை அம்­சங்­களும் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் இடம்­பெற்று இருந்­தன.

அர­சாங்­கச் சேவை­யா­ள­ரான பிரேம் ராஜ், 38, என்­ப­வர் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் தன்­னு­டைய ஏழு வயது புதல்வி ரேயா­வு­டன் கலந்­து­கொண்­டார்.

"தாயாக இருந்­தா­லும் தந்­தை­யாக இருந்­தா­லும் குடும்­பத்­து­டன் நேரத்­தைச் செல­வி­டு­வது, பிள்ளை­க­ளைப் பார்த்­துக் கொள்­வது முக்­கி­ய­மா­னது.

"இதில் இரு­வ­ருக்­கும் சரி பங்கு இருக்­கிறது," என்று அவர் கூறி­னார்.