திருக்குறளின் அர்த்தத்தை அழகாக புரியவைத்த புரூக்ஸ்மா

2 mins read
9fb52285-13d8-4bc0-b523-9dd8fbf8304c
-

அனுஷா செல்­வ­மணி

தமிழ்­மொ­ழி­யில் பொதிந்­துள்ள எழிலை மிக எளி­மை­யான பாணி­யில் எடுத்­துக் கூறி­னார் அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த தமிழ் புல­மை­யு­டைய தாமஸ் ஹிட்­டோஷி புரூக்ஸ்மா. உல­கப் பொது­ம­றை­யா­கப் போற்­றப்­படும் திருக்­கு­ற­ளை­யும் தமிழ்­மொழி சார்ந்த கருத்­து­க­ளை­யும் அவர் சிறப்­பாக எடுத்­து­ரைத்­தார்.

கழி­பெ­ருங் காரிகை: திருக்­கு­ற­ளில் (ன்) அழகு என்ற தலைப்­பில் தேசிய நூலக வாரி­யத்­தின் ஏற்­பாட்­டில், சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய தமிழ் இலக்­கிய தொகுப்­பான தமிழ்ச் சோலை­யின் முத­லாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்­டிய நிகழ்­வில் திரு தாமஸ் கலந்துகொண்டார்.

நேற்று உட்­லண்ட்ஸ் வட்­டார நூல­கத்­தில் இடம்­பெற்ற நிகழ்ச்­சி­யில், 100க்கும் மேற்­பட்ட பார்­வை­யா­ளர்­கள் கலந்­துக்­கொண்­ட­னர்.

ஜப்­பா­னிய அமெ­ரிக்­க­ரான திரு தாமஸ், தமிழ்­மொ­ழி­யில் சர­ள­மா­கப் பேசுவதோடு திருக்­கு­றள் பற்றி உரை­யாற்­றிப் பார்­வை­யா­ளர்­களை வியப்­பில் ஆழ்த்­தி­னார்.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் உறுப்­பி­ன­ரான இலக்­கியா செல்­வ­ராஜி, நிகழ்­வின் இறு­தி­யில் கேள்வி-பதில் அங்­கத்தை வழி­நடத்­தி­னார். பார்­வை­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு சிந்தனையைத் தூண்டும் வகையில் பதி­ல­ளித்த திரு தாமஸ், தமிழ்­மொ­ழி­யின் அழகை இளை­யர்­க­ளுக்கு சுவா­ர­சி­ய­மான வடி­வில் எடுத்­துக்­கூறு­வ­தால் அவர்­க­ளின் மொழிப் புழக்­கத்தை அதி­க­ரிக்­க­லாம் என வலி­யு­றுத்­தி­ய­தோடு திருக்­கு­றள் ஒவ்­வொன்­றும் நம் வாழ்­க்கைக்­குப் பொருந்­தும் என பெரு­மையுடன் கூறினார்.

தேசிய நூலக வாரி­யத்­தின் தமிழ்­மொழி சேவை­க­ளுக்­கான தலை­வர் அழ­கிய பாண்­டி­யன், "தமிழ்ச் சோலை­யின் முத­லாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த நிகழ்ச்சி மட்­டு­மின்றி, பொது­மக்­கள் தமிழ்ச் சோலை­யில் சேர்க்­கப்­பட்ட புதிய அம்­சங்­க­ளை­யும் எதிர்­பார்க்­க­லாம்," என்­றார்.

"தாமஸ் சிங்­கப்­பூ­ருக்கு வரப்­போ­கி­றார் என்று கேள்­விப்­பட்­ட­வு­டனே நான் மிக­வும் மகிழ்ச்சி அடைந்­தேன். அவர் தமிழ்­மொழி­யில் சர­ள­மா­கப் பேசும்­போது எனக்கு இவ­ரைப்­போல ஒரு நாள் பேச வேண்­டு­மென்ற உத்­வே­கம் பிறந்­துள்­ளது," என பகிர்ந்­து­கொண்­டார் கடந்த ஈராண்­டு­களாக தமிழ் மொழி­யைக் கற்­றுக்­கொண்டு வரு­ம் சீனரான 31 வயது யாப் ஜூன் ஹாங்.

தக­வல் தொழில்­நுட்பத் துறை­யில் பணி­பு­ரி­யும் 34 வயது ரேவதி சீனி­வா­சன், "தமிழ் இனத்­தைச் சேராத ஒரு­வர் நம் மொழியை சிறப்­பாகக் கற்­றுப் பேசும்­போது, தமி­ழ­ரா­கப் பிறந்த நாம் தமி­ழில் பேச தயங்­கக்கூடாது என்­ப­தற்கு ஒரு சிறந்த முயற்­சி­யாக இந்­நி­கழ்ச்சி அமைந்­தது," என்று கூறி­னார்.