பாதிக்கப்படக்கூடிய ஊழியர் மேம்பாட்டில் என்டியுசி அக்கறை

2 mins read
f7cbc84e-a0f6-4e59-a595-d2ab1504d10e
-

குழாய் பழு­து­பார்ப்­போர் (பிளம்­பர்), மின்­சா­தன பணி­யா­ளர்­கள், குளிர்­சா­தன தொழில்­நுட்­பர் ஆகி­யோர் விரிவுபடுத்தப்பட்ட வேலை வாய்ப்­பு­க­ளைப் பெற உள்­ள­னர். தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) இந்­தத் துறை­கள் தொடர்ந்து உள்­ளூர் ஊழி­யர்­க­ளைப் பெறு­வதை உறு­தி­செய்­யும் வகை­யில் செயல்­ப­டு­கிறது.

ஊழி­யர் உரி­மை­கள், நலன்­களை மேலும் பாது­காக்­கும் வகை­யில் என்­டி­யுசி வேலை வாய்ப்­பு­கள் விரி­வாக்­கம், பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு, ஊழி­யர்­கள் போட்­டித்­தன்­மை­யு­டன் இருக்க உத­வும் பயிற்­சி­கள் ஆகி­ய­வற்­றைப் பரி­சீ­லிக்­கும் என்று தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் துணைப் தலைமைச் செ­ய­லா­ள­ரான திரு டெஸ்­மண்ட் டான் கூறியுள்­ளார்.

அதி­பர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின்­மீது நேற்று நடை­பெற்ற நாடா­ளு­மன்ற விவா­தத்­தில் பேசிய பாசிர் ரிஸ்- பொங்­கோல் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு டான், என்­டி­யுசி முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் மூன்று பகு­தி­களை எடுத்­து­ரைத்­தார்.

முதல் கவ­னம் வேலை வாய்ப்­பு­களை விரி­வு­ப­டுத்துவது என்று பிர­த­மர் அலு­வ­லக துணை அமைச்­ச­ரு­மான திரு டான் கூறி­னார். இதில் என்­டி­யுசி முன்­னு­ரிமை அளிக்­கும் இரு பிரி­வி­ன­ராக, திற­மை­யான அத்­தி­யா­வ­சி­யத் தொழில்­களில் உள்ள ஊழி­யர்­கள், இளைய ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரைக் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் அன்­றாட வாழ்க்­கை­யில் நேர­டி­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் மூன்று அத்­தி­யா­வ­சிய தொழில்­க­ளான குழாய் பழு­து­பார்ப்­போர் (பிளம்­பர்), மின்­சா­தன பணி­யா­ளர்­கள், குளிர்­சாதன தொழில்நுட்பர்கள் ஆகி யோருக்கும் தொழிற்­சங்­கம் முன்­னு­ரிமை அளிக்­கும் என்றார் திரு டான்.

இத்­து­றை­க­ளுக்­கி­டையே வேலை­யி­டப் பயிற்­சி­கள், வழி­காட்­டி­க­ளு­டன் இளை­யர்­களை இணைக்­க­வும் என்­டி­யுசி திட்­ட­மிட்­டுள்­ளது.

இரண்­டா­வது, ஊழி­யர்­க­ளின் முக்­கிய கவ­லை­க­ளான வாழ்க்­கைச் செல­வு­கள் போன்­ற­வற்­றுக்கு ஆத­ர­வ­ளிப்­பது. வேலைப் பாது­காப்பு, வேலை­யில்­லா­தோ­ருக்கு ஆத­ரவு, போதிய ஓய்­வூ­தி­யம், பரா­ம­ரிப்பு ஆத­ரவு போன்ற இடைக்­கால மற்­றும் நீண்டகால சிக்­கல்­க­ளைத் தீர்க்க தொழிற்­சங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளது.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யின் கீழ் அதி­க­மான ஊழி­யர்­களை சேர்க்க தொழிலாளர் இயக்கம் தீவி­ர­மாக அழுத்­தம் கொடுத்து வரு­கிறது.

வேலை இழந்­த­வர்­க­ளுக்­கான வரு­மான ஆத­ர­வுக்கு தொழிற்­சங்­கம் தொடர்ந்து பாடு­பட்டு வரு­வ­தா­கக் கூறி­னார் திரு டான். தொழில்­துறை மாற்­றங்­கள், மறு­சீ­ர­மைப்பு போன்­ற­வற்­றால் அதி­கம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நடுத்­தர ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் வேலை தேடு­தல், மறு­தி­றன் பயிற்சி ஆகி­ய­வற்­றில் உதவி அளிக்­கப்­ப­டு­வ­தாக அவர் சொன்­னார்.

மூன்­றா­வ­தாக, வேலைக்­குப் பொருத்­த­மா­ன­வ­ரா­க­வும், போட்­டித்­தன்­மை­யு­டன் திகழ இருக்­கும் திறன்­களை ஆழப்­ப­டுத்தி புதிய திறன்­களை வளர்ப்­ப­தன் மூலம் மாறி­வ­ரும் வேலைச் சந்­தை­யின் வேலை மாற்­றங்­க­ளைக் கையா­ளு­வ­தற்­குத் ஊழி­யர்­க­ளுக்கு என்­டி­யுசி ஆத­ர­வ­ளிக்­கும் என்று திரு டான் கூறி­னார்.

நிறு­வ­னப் பயிற்­சிக் குழுக்­களை அமைப்­ப­தற்கு என்­டி­யுசி உடன் இணைந்து பணி­யாற்­று­மாறு அனைத்து முத­லா­ளி­க­ளுக்­கும் தொடர்ந்து அழைப்பு விடுப்­ப­தா­க­வும் திரு டான் தெரி­வித்­தார்.