தனியார் துறையில் மொழிபெயர்ப்பாளராகவும் உரை பெயர்ப்பாளராகவும் குறைந்தது ஓர் ஆண்டுக்கு சேவையாற்றிவரும் சிங்கப்பூரர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள தொடர்பு, தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்புத் திறனாளர் மேம்பாட்டுத் திட்டம் கைகொடுக்கிறது.
தமிழ்மொழியில் பட்டயம், பட்டக்கல்வி ஆகியவை உள்பட மொழி, மொழிபெயர்ப்பு சார்ந்த பயிலரங்குகள், இணையப் பகிர்வரங்குகள், கலந்துரையாடல்கள், மாநாடுகள், சான்றிதழ் சார்ந்த தேர்வுகள் ஆகியவற்றுக்குச் செல்ல தகுதிபெறும் சிங்கப்பூர் மொழிபெயர்ப்பாளர்களும் உரை பெயர்ப்பாளர்களும் மானியத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதில் ஓர் ஆண்டுக்குள் முடிக்கப்படும் திட்டங்கள் ஏப்ரல் முதல் தேதிக்குள் ஆரம்பிக்க அல்லது முடிக்க வேண்டும்.
ஓர் ஆண்டுக்கு மேலாக நீடிக்கும் திட்டங்களை மேற்கொள்வோர் விண்ணப்பம் அனுப்பிய மூன்று ஆண்டுகளுக்குள் 31 மார்ச் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
அவற்றில் பங்கேற்பதற்குச் செலவாகும் கட்டணத்தில் 90 விழுக்காடுவரை அல்லது அதிகபட்சம் $10,000 வரை ஈடுசெய்ய மானியம் உதவும்.
இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களை 2023 ஜூன் 30ஆம் தேதிக்குள் தாக்கல்செய்ய வேண்டும்.
https://www.mci.gov.sg/ முகவரியில் மேல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

