தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் கடத்தல்; மலேசியாவில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு

2 mins read
fd770809-2cd4-4789-abfe-f80b9caba3b3
-

போதைப் பொருள் கடத்­திய குற்றத்­திற்­காக தேடப்­பட்டு வந்த முன்­னாள் நிறு­வன உரி­மை­யா­ள­ரான லியான் ஹோ ஹெங், 56, மலே­சி­யா­வில் கைது செய்­யப்­பட்­டார். சிங்­கப்­பூர் கொண்டு வரப்­பட்ட அவர் மீது நேற்று மாவட்ட நீதி­மன்­றத்­தில் போதைப்­பொ­ரு­ளைக் கடத்­தி­ய­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டது.

காணொளி வழி­யாக முன்­னி­லை­யான லியான் மரண தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கி­றார்.

'அக்ரா' எனப்­படும் கணக்­கி­யல், நிறு­வ­னக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தின் தர­வு­களை ஆராய்ந்­த­போது சுவான் ஹப் செங் டெண்­டேஜ் கன்ஸ்ட்­ரக்­‌ஷன், லோங் செங் சேர்ஸ் அண்ட் டேபிள் ரெண்­டல் எண்­டர்­பி­ரைஸ் என்ற இரு நிறு­வ­னங்­களை அவர் நடத்­தி­வந்­தது தெரிந்­தது.

2018 நவம்­பர் 19ஆம் தேதி­யி­லி­ருந்து லியான் சிங்­கப்­பூ­ரில் இல்லை என்று முன்­னர் வெளி­யிட்ட அறிக்­கை­யொன்­றில் சிஎன்பி எனும் மத்­திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரி­வித்­தி­ருந்­தது.

2020 அக்­டோ­பர் 7ஆம் தேதி­வாக்­கில் டான் குவோ­ஷெங், 26 என்ற நப­ரி­டம் கடத்­து­வ­தற்­காக குறைந்­தது 253 கிராம் மிதாம்­பீட்­ட­மைனை (methamphetamine) அவர் வைத்­தி­ருக்­கச் சொன்­ன­தா­கத் தெரி­கிறது. இதன் பிறகு தாமான் கெம்­பங்­கான் அரு­கே­யுள்ள ஜாலான் செலா­மட்­டில் உள்ள வீட்­டின் முன்பு சிங்­கப்­பூ­ர­ரான டானும் போதைப்­பொ­ரு­ளு­டன் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இவர் மீது ஏற்­கெ­னவே குற்­றம்­சாட்­டப்­பட்டு வழக்கு நிலு­வை­யில் உள்­ளது.

டான் கைது செய்­யப்­பட்­ட­தை­ அ­டுத்து லியா­னுக்­கும் இதில் தொடர்பு இருப்­பது தெரியவந்தது என்று மத்­திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

அவ­ரது இருப்­பி­டத்­தைக் கண்டுபி­டிக்க வெளி­நாட்டு அதி­கா­ரி­க­ளின் உதவி நாடப்­பட்­டது. இதன் தொடர்ச்­சி­யாக 2023 மார்ச் 31ஆம் தேதி மலே­சி­யா­வில் லியானை அந்நாட்டின் காவல் ­து­றை­யி­னர் கைது செய்­த­னர். அடுத்த மாதமே சிங்­கப்­பூ­ரின் சிஎன்பி அதி­கா­ரி­க­ளி­டம் அவர் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

சிஎன்­பி­யின் நட­வ­டிக்­கை­ களுக்­கான துணை இயக்­கு­ந­ரான மூத்த உதவி ஆணை­யர் லியோன் சான், சிங்­கப்­பூ­ரின் சட்ட அம­லாக்­கத்­தி­லி­ருந்து தப்பி வெளி­நாட்­டில் ஒளிந்­து­கொள்­ள­லாம் என்று போதைப் பொருள் கடத்­தல்­கா­ரர்­கள் நினைக்­கி­றார்­கள். ஆனால் பாது­காப்­பான புக­லி­டம் இல்லை என்­பதை அவர்கள் இதன் மூலம் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்றார்.

லியா­னின் வழக்கு ஏப்­ரல் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்­கப்­பட்டுள்ளது.