சமாதான நீதிபதியாக பதவியேற்ற திரு அன்பரசு ராஜேந்திரன்

சமாதான நீதிபதியாக பதவியேற்ற திரு அன்பரசு ராஜேந்திரன்

2 mins read
c0630c37-d57f-492b-b639-c01249276661
-

கரு­ணா­நிதி துர்கா

அதி­பர் ஹலிமா யாக்­கோப் முன்­னி­லை­யில் நேற்று 85 பேர் சமா­தான நீதி­ப­தி­க­ளா­கப் பத­வி­யேற்­றுக் கொண்­ட­னர். நேற்று இந்­தப் பத­வி­யேற்பு விழா இஸ்­தா­னா­வில் அரசு நீதி­மன்­றங்­க­ளின் தலைமை நீதி­ப­தி­யான வின்­சென்ட் ஹூங் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது.

தங்­க­ளது பணியிலும் பொதுச் சேவையிலும் சமூக பணியிலும் சமூ­கத்­திலும் அதிக தாக்­கத்தை ஏற்படுத்திய சிங்­கப்­பூ­ரர்­களே சமா­தான நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

சமா­தான நீதி­ப­தி­யாக பத­வி­யேற்­றதை மிக­வும் பெரு­மைக்­கு­உரி­ய­தாக கரு­தும் சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி அன்­ப­ரசு ராஜேந்­தி­ரன் சமூ­கத்­திற்கு குறிப்­பி­டத்­தக்க பங்கை ஆற்­றி­யுள்­ளார்.

"நான் சமூ­கத்­திற்கு இது­வரை ஆற்­றிய பணி அடை­யா­ளம் காணப்­பட்டு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டு­ள்­ளது. எனது கடின உழைப்­பிற்­கான முழு­மை­யான அர்த்­தம் கிடைத்­துள்­ள­தாக உணர்­கிறேன்," என்று திரு அன்­ப­ரசு கூறி­னார்.

சிண்­டா­வின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யாக விளங்­கு­வதோடு இன்று மக்­க­ளுக்கு உதவ தனக்கு கூடு­த­லாக மதிப்­பிற்­கு­ரிய சமா­தான நீதி­பதி என்ற தளம் வழங்­கப்­பட்­டுள்­ளதை குறிப்­பிட்டு மகிழ்ச்சி தெரி­வித்­தார் இவர்.

ஒரு சமா­தான நீதி­ப­தி­யாக சிறைச்­சா­லை­க­ளுக்கு வரு­கை­யளிக்­கும் நீதி­ப­தி­யா­க­வும் நீதி­மன்­றத்­தில் சம­ரச நடு­வ­ராகவும் பணி­யாற்­று­வார் திரு அன்­ப­ரசு.

அது­மட்­டு­மல்­லா­மல், திரு­மணப் பதி­வ­கத்­தின் மூலம் திரு­மண உறு­தி­மொழி எடுத்­துக்­கொள்­ளு­தலை வழி­ந­டத்து­ப­வ­ரா­க­வும் இவர் சேவை­யாற்­று­வார்.

"மேலும் தொடர்ந்து சமூ­கத்­திற்கு சேவை­யாற்ற வேண்­டும் என்ற ஊக்­கத்தை இப்­ப­தவி கொடுப்­ப­தோடு மற்­ற­வர்­க­ளுக்கு நான் ஒரு முன்னுதார­ண­மாக விளங்­கு­வேன் என நம்­பு­கிறேன்," என்­றும் திரு அன்­ப­ரசு கூறி­னார்.

சமா­தான நீதி­ப­தி­க­ளாக நிய­ம­னம் பெற்ற 85 பேரின் பதவிக்கா­லம் ஐந்து ஆண்­டு­களுக்கு நீடிக்­கும். அவர்­களில் 60 சமா­தான நீதி­ப­தி­கள் மறு­நி­ய­ம­னம் பெற்­ற­வர்­கள். 25 பேர் புதி­தாக நிய­மனம் பெற்­ற­வர்­கள்.