உணவுக்குப் பிறகு மேசையை சுத்தப்படுத்துவது கட்டாயம்

உணவுக்குப் பிறகு மேசையை சுத்தப்படுத்துவது கட்டாயம்

2 mins read
baccf00e-5da0-4869-b2f2-fc64504e4c7b
-

உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகளில் ஜூன் 1 முதல் கடுமையான நடவடிக்கை

எதிர்­வ­ரும் ஜூன் 1ஆம் தேதி முதல் காப்­பிக் கடை­க­ளி­லும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் உணவு நிலை­யங்­க­ளி­லும் உண­வு உண்ட பிறகு, மேசை­யில் தாங்­கள் பயன்­ப­டுத்­திய தட்­டு­கள், கரண்­டி­கள் ஆகி­ய­வற்றை அப்­பு­றப்­ப­டுத்தி, அதற்­கு­ரிய இடங்­களில் வைக்­கா­த­வர்­களுக்கு எதி­ராக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம், சிங்­கப்­பூர் உணவு அமைப்பு ஆகி­யவை கடு­மை­யான நட­வடிக்கை எடுக்­கக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வாறு செய்­வோர், உட­ன­டி­யாக தாங்­கள் பயன்­ப­டுத்­திய தட்­டு­கள், கரண்­டி­கள் ஆகி­ய­வற்றை உரிய இடத்­தில் வைக்க அறிவுரை வழங்கப்படுவதற்கு பதி­லாக, முதல் முறை அந்­தத் தவ­ற்றைச் செய்­வோ­ருக்கு எழுத்து­பூர்வ எச்­ச­ரிக்­கைக் கடி­தம் வழங்­கப்­படும் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று கூறி­யது. அதே தவற்றை மீண்­டும் செய்­வோருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம் அல்­லது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­ப­ட­லாம்.

உண­வங்­காடி நிலை­யங்­களில் உண­வுக்­குப் பிறகு மேசை­யைச் சுத்­தப்­ப­டுத்த வேண்­டும் என்று 2021, செப்­டம்­பர் 1ஆம் தேதி­யன்­றும், காப்­பிக் கடை­கள், உணவு நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றில் உண­வுக்­குப் பிறகு மேசை­யைச் சுத்­தப்­ப­டுத்த வேண்­டும் என்று ஜன­வரி 1ஆம் தேதி இரு அமைப்பு­களும் அறி­வித்­த­தி­ல் இ­ருந்து இது­வரை யாருக்­கும் அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­வில்லை அல்­லது எவரும் நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும், கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை, அதி­கா­ரி­கள் கூறும் ஆலோ­ச­னை­யைப் பின்­பற்­றாத இரு­வ­ருக்கு எழுத்­து­பூர்வ எச்­ச­ரிக்­கைக் கடிதம் வழங்­கப்­பட்டது.

நல்ல உணவுப் பழக்­கத்தை மக்­க­ளுக்கு ஆழ­மா­கப் பதிய வைக்­க­வும் உண­வுக்­குப் பிறகு மேசை­யில் தாங்­கள் பயன்­ப­டுத்­திய தட்­டு­கள், கரண்­டி­கள் ஆகி­ய­வற்றை அப்­பு­றப்­ப­டுத்த தவ­றும் சிறிய எண்­ணிக்­கை­யி­லா­ன­வர்­களுக்கு அதை மீண்­டும் வலி­யுறுத்­த­வுமே இந்­தக் கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்­றும் சுற்­றுப்­புற வாரி­யம் தெளி­வுப­டுத்­தி­யது.

உடற்­கு­றை­யா­ளர்­கள், முதி­யோர், பிள்­ளை­கள் ஆகி­யோ­ரால் மேசை­யில் உள்­ள­வற்றை அப்­புறப்­ப­டுத்­த முடி­யாது என்­ப­தால் அவர்­க­ளுக்கு எதி­ராக தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் சிங்­கப்­பூர் உணவு அமைப்­பும் அம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­காது என்­றும் விளக்­கப்­பட்­டது.

மேலும், பொது இடங்­களில் குப்­பை போடு­த­லுக்கு எதி­ரா­கக் கடு­மை­யான அம­லாக்க நட­வடிக்கை எடுக்­க­வும் பரி­சீ­லித்து வரும் தேசிய சுற்­றுப்­புற வாரி­யம், குப்­பை போடு­ப­வர்­க­ளைப் பிடிப்­பதற்­காக பல்­வேறு இடங்­களில் கண்­கா­ணிப்பு கேம­ராக்­களைப் பொருத்­தி­யுள்­ளது.

அவ்­வாறு குப்பை போட்டு முதல் முறை­யா­கப் பிடி­ப­டு­ப­வர்­களுக்கு $300 அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம். மீண்­டும் அக்­குற்­றத்­தைப் புரி­வோர் நீ்திமன்­றத்­தில் நிறுத்­தப்­பட்டு, சீர்­தி­ருத்த வேலை ஆணை பிறப்­பிக்­கப்­ப­ட­லாம்.

அவ்­வாறு ஆணை பிறப்­பிக்­கப்­பட்­ட­வர்­கள் மூன்று முதல் 12 மணி­நே­ரம் பொது இடங்­க­ளைச் சுத்­தம் செய்ய வேண்­டும்.