சிலாங்கூரில் சிங்கப்பூரரிடம் வழிப்பறி; வெறுங்கையோடு திரும்பிய திருடன்

1 mins read
25fe4901-1613-4c73-a235-306061880c34
-
multi-img1 of 2

மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாநிலத்­தில் உள்ள தாமான் பத்து மலை பகு­தி­யில் தம் கண­வ­ரு­டன் சிங்­கப்­பூர் மாது ஒரு­வர் நடந்து சென்­ற­போது, அவர் கழுத்­தில் இருந்த தங்­கச் சங்­கி­லி­யைக் குறி­வைத்து வழிப்­பறி செய்ய முயன்­றான் திரு­டன்.

தங்­கச் சங்­கி­லி­யை அவன் பிடித்து இழுத்­த­போது 64 வய­து­டைய அந்த மாது, முன்­னோக்கி விழுந்­து­விட்­டார்.

டிக்­டாக் தளத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்ட காணொளி ஒன்­றில், சம்­ப­வம் முழு­மை­யா­கப் பதி­வா­கி­யுள்­ளது. காலை 10.45 மணி­ய­ள­வில் மாது அவ­ரின் கண­வ­ரு­டன் வாக­னம் நிறுத்­தும் இடம் ஒன்­றில் நடந்து செல்­வ­தா­க­வும் அவர்­க­ளின் பின்­னால் மோட்­டார்­சைக்­கி­ளில் தலைக்­க­வ­சம் அணிந்த ஒரு நபர் கவ­னித்­துப் பார்ப்­ப­தா­க­வும் தெரி­கிறது.

அதை­ய­டுத்து வண்­டியை மெல்ல ஓட்­டிச் சென்ற அந்த நபர், தங்­கச் சங்­கி­லி­யைப் பல­வந்­த­மாக இழுக்க, சிறிது தூரம் அந்த மாது இழுத்­துச் செல்­லப்­பட்டு பின்­னர் முன்­னோக்கி விழுந்­தார்.

உடனே, மாதின் கண­வர் அவ­ருக்கு உத­வி­னார்.

சம்­ப­வத்தை உறு­திப்­ப­டுத்தி மலே­சிய காவல்­துறை அறிக்கை விடுத்­தது.

இருப்­பி­னும் தங்­கச் சங்­கிலி அறுந்து கீழே விழுந்­து­விட்­ட­தா­க­வும் திரு­டன் அங்­கி­ருந்து வெறுங்­கை­யோடு சென்­று­விட்­ட­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்தது.