தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலைப்பாம்பை துன்புறுத்தி வெட்டிய கும்பல்

1 mins read
46968177-c17e-42a5-a706-fcf1f7ac1a77
-

பூன் லே ஈரச்­சந்தை, உணவு நிலை­யத்­தில் ஆட­வர்­கள் சிலர் கும்­ப­லாக மலைப்­பாம்பு ஒன்­றைத் துன்­பு­றுத்தி பின்­னர் அதை இறைச்சி வெட்­டும் கத்­தி­யால் அடித்­துக் கொன்றனர்.

இது குறித்த காணொளி ஒன்று சமூக ஊட­கத்­தில் பர­வி­யதை அடுத்து ஏக்­கர்ஸ் எனப்­படும் விலங்கு நலச் சங்­கம் இது­பற்­றிய மேல்­வி­வ­ரங்­கள் வேண்டி கோரிக்கை விடுத்­துள்­ளது.

அது நேற்று தனது ஃபேஸ்புக் பதி­வில் இந்­தக் காணொ­ளியை பொது­மக்­களில் ஒரு­வர் தனக்கு அனுப்­பி­ய­தா­கத் தெரி­வித்­தது.

அதில் கும்­ப­லாக சில ஆட­வர்­கள் இரண்டு மீட்­டர் நீள­முள்ள ஒரு மலைப்­பாம்பை துன்­பு­றுத்து

­வ­தைக் காண முடிகிறது. பின்­னர் அதை பொருள்கள் அடுக்கி வைக்­கப் பயன்­ப­டுத்­தும் ஒரு பிளாஸ்­டிக் பெட்­டி­யில் அந்த மலைப்­பாம்பை உண­வுக் கடைக்கு அரு­கில் எடுத்­துச் சென்று அதை இறைச்சி வெட்­டும் கத்­தி­யால் பல­முறை அடித்து கொல்­லும் காட்சி அந்த காணொ­ளி­யில் தெரி­கிறது.

இதன் தொடர்­பில் அனைத்­துத் தக­வல்­களும் தேசிய பூங்­காக் கழ­கத்­தி­டம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக ஏக்­கர்ஸ் கூறி­யது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து பூங்­காக் கழ­கம் விசா­ரணை நடத்தி வரு­வ­தா­க­வும் ஏக்­கர்ஸ் விளக்­கி­யது.

விலங்­கு­க­ளைத் துன்­பு­றுத்­தும் முதல் முறைக் குற்­ற­வா­ளி

­க­ளுக்கு $15,000 அப­ரா­தமோ அல்­லது 18 மாத சிறைத்­தண்­ட­னையோ அல்­லது இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.