ஞாயிறன்று சாங்கி கடற்கரைப் பூங்காவில் புயல் காரணமாக 14 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அத்துடன், மேலும் ஆறு மரங்கள் சேதமடைந்தது.
இதைத் தெரிவித்த தேசிய பூங்காக் கழகம் கடந்த ஞாயிறன்று பிற்பகல் கிட்டத்தட்ட 4.00 மணிக்கு புயல் காரணமாக சாங்கி கடற்கரைப் பூங்காவில் அந்த மரங்கள் சாய்ந்ததாகக் கூறியது.
மேலும் ஆறு மரங்கள் சேத
மடைந்ததாக தனக்குத் தகவல் கிடைத்ததாகவும் கழகம் கூறியது.
எனினும், புயலில் எவரும் காயமடையவில்லை என்று கழகம் தெரிவித்தது.
தற்பொழுது சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் கழகம் ஈடுபட்டுள்ளது.
புயலில் சாய்ந்த மரங்களில் சாலையோரங்களில் பிரபலமாக காணப்படும் மஞ்சள் பூக்களைக் கொண்ட மரங்களும் 25 மீட்டர் உயரம் வளரக்கூடிய 'இந்தியன் பீச்' எனப் பெயர் கொண்ட மரங்களும் அடங்கும்.
இது பற்றிக் கருத்துைரத்த தேசிய பூங்காக் கழக இயக்கு
நரான சியா செங் ஜியாங், பூங்கா தடங்ளுக்கு குறுக்கே விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு விட்டதாக விளக்கினார்.
இதில் மற்ற மரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் இருந்தால் அவை அகற்றப்படும் என்றும் திரு சியா தெரிவித்தார்.

