மோசடியில் சிக்கிய மாது தன்னைத் தானே காணொளி எடுத்து அனுப்பினார்

மோசடியில் சிக்கிய மாது தன்னைத் தானே காணொளி எடுத்து அனுப்பினார்

1 mins read
f0642727-b736-4e26-91cd-4ff04e5a57c0
-

சீனா­வி­லி­ருந்து இங்கு கல்வி கற்க வந்த 19 வயது மாது மோச­டிக் கும்­ப­லி­டம் சிக்­கி­னார். அந்­தக் கும்­பல் சிங்­கப்­பூர், சீன அதி­கா­ரி­கள் போல் நடித்து அந்த மாதை சீனா­வுக்கு திருப்பி அனுப்­பப்­போ­வ­தாக மிரட்­டி­யது.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி ஆணைய அதி­காரி எனக் கூறிக்­கொள்­ளும் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து அந்த மாதுக்கு தொலை­பேசி அழைப்பு ஒன்று வந்­தது. மாது சீனா­வின் குவாங்சு மாநி­லத்­தில் கொவிட்-19 கொள்­ளை­நோய் தொடர்­பாக தவ­றான தக­வல்­கள் தந்­த­தா­கக் கூறி­யது. அத்­து­டன், அந்த மாது கைப்­பேசி செயலி ஒன்­றின் மூலம் விசா­ரணை என்ற பெய­ரில் தின­மும் காணொளி வாயி­லாக சீன அதி­கா­ரி­கள் எனக் கூறிக்­கொள்­ளும் சில­ரி­டம் அவர் தொடர்­பு­கொள்ள வைக்­கப்­பட்­டார்.

இதைத் தொடர்ந்து பிணைத்­தொ­கை­யாக மாது $200,000 தரா­விட்­டால் அவர் சீனா­வுக்கு திருப்பி அனுப்­பப்­

ப­டு­வார் என்­றும் மிரட்­டப்­பட்­டார். மாதி­டம் பணம் இல்­லா­த­தால் அவரை, குற்­ற­வி­யல் வழக்கு என்ற போர்­வை­யில், தன்­னைத் தானே காணொளி எடுத்து அனுப்­பு­மா­றும் மோச­டிக் கும்­பல் கூறி­யது. மாது அதை­யும் செய்­தார். இதை வைத்து மோச­டிக் கும்­பல் மாதின் பெற்­றோ­ரைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்­டி­யது. பிணைத் தொகை கேட்டு மிரட்­டப்­பட்ட மாதின் பெற்­றோர் மாதின் ஆசி­ரி­யரை தொடர்பு கொண்­ட­னர். ஆசி­ரி­யர் காவல்­து­றையை அணுகி மாதை மீட்க உத­வி­னார்.