முன்னாள் வாழ்க்கைத்துணை பராமரிப்புத் தொகை தொடர்பில் அமலாக்கக் குழு

முன்னாள் வாழ்க்கைத்துணை பராமரிப்புத் தொகை தொடர்பில் அமலாக்கக் குழு

2 mins read
f033603e-9f2f-4381-8749-092babddc929
-

முன்­னாள் வாழ்க்­கைத்­து­ணைக்கு பரா­ம­ரிப்­புத் தொகை­யைத் தர மறுப்­போ­ரி­ட­மி­ருந்து அதனை எளி­தில் பெற உத­வும் சட்ட மசோதா நாடா­ளு­மன்­றத்­தில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

குடும்ப நீதி சீர்­தி­ருத்த மசோதா நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முதல் வாசிப்­புக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்­கீழ், புதிய பரா­ம­ரிப்பு அம­லாக்க அதி­கா­ரி­கள் குழு அமைக்­கப்­படும்.

வாழ்க்­கைத்­து­ணைக்கு பரா­ம­ரிப்­புத் தொகை தர மறுக்­கும் சம்­ப­வங்­கள் தொடர்ந்து கவ­லைக்­கு­ரி­ய­ன­வாக உள்ள நிலை­யில், அவை தொடர்­பில் உறு­தி­யான தீர்­வு­காண அந்­தக் குழு உத­வும்.

சட்ட அமைச்­சும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சும் அவ்­வாறு கூறின.

பரா­ம­ரிப்பு அம­லாக்க அதி­கா­ரி­க­ளுக்கு சம்­பந்­தப்­பட்­ட­வர்­களின் சொத்து, வரு­மான விவ­ரங்­க­ளைக் கேட்­டுப் பெறும் அதி­கா­ரம் உண்டு.

வங்­கி­கள், மத்­திய சேம­ நி­திக் கழ­கம், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் உள்­ளிட்ட அர­சாங்க அமைப்­பு­கள் ஆகி­ய­வற்­றி­டம் இருந்து அதிகாரிகள் அந்­தத் தக­வல்­க­ளைப் பெற முடி­யும்.

ஒரு­வர் உண்­மை­யி­லேயே பரா­ம­ரிப்­புத் தொகை­யைத் தர இய­லா­த­வரா அல்­லது வசதி இருந்­தும் தர மறுக்­கி­றாரா என்று முடி­வெ­டுப்­ப­தில் அம­லாக்க அதி­கா­ரி­க­ளுக்கு அந்­தத் தக­வல்­கள் உத­வும்.

நீதி­மன்­றம் பொருத்­த­மான உத்­த­ர­வைப் பிறப்­பிக்­க­வும் அவை கைகொ­டுக்­கும் என்­பதை அமைச்­சு­கள் சுட்­டின.

உண்­மை­யி­லேயே பரா­ம­ரிப்­புத் தொகை­யைத் தர சிர­மப்­ப­டு­வோர் உரிய நிதி உத­வி­யைப் பெறு­வ­தற்கு அம­லாக்­கக் குழு­ அ­தி­கா­ரி­கள் வழி­வ­குப்­பர்.

பரா­ம­ரிப்­புத் தொகை­யைத் தரா­மல் ஏய்ப்­ப­தற்­காக தங்­கள் முன்­னாள் வாழ்க்­கைத்­துணை ஏமாற்று நட­வ­டிக்­கை­களில் ஈடு­படு­வ­தா­கச் சிலர் கரு­தக்­கூ­டும்.

எடுத்­துக்­காட்­டாக, வங்­கிக் கணக்­கில் இருந்து பணத்தை எடுத்து வேறு எங்­கா­வது சேமித்து வைத்­தி­ருப்­ப­தாக அவர்­கள் நினைக்­கக்­கூ­டும். இத்­த­கைய வழக்­கு­களில், அதி­கா­ரி­கள் பெறும் தக­வல்­களை ஆதா­ரங்­க­ளா­கப் பயன்­ப­டுத்த இய­லும்.

தற்­போது இதற்­கான செலவை, புகார் அளிப்­ப­வர்­களே ஏற்க வேண்­டி­யுள்­ளது.

பெரும்­பா­லும் நாட்­சம்­ப­ளம் பெறும் ஊழி­யர்­க­ளாக இருக்­கும் அவர்­கள் இதன் தொடர்­பில் நீதி­மன்ற விசா­ர­ணைக்­குச் செல்ல வேண்­டி­யி­ருப்­ப­தால் அன்­றைய ஊதி­யம் கிடைக்­கா­மல் சிர­மப்­பட நேரி­டு­கிறது.

பரா­ம­ரிப்­புத் தொகையை குறிப்­பிட்ட தேதிக்­குள் செலுத்­தி­ய­தற்கு ஆதா­ரம் காட்­டும்­படி உத்­த­ர­வி­ட­வும் மசோதா பரிந்­து­ரைக்­கிறது. அவ்­வாறு செய்­யத் தவ­று­வோ­ருக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.