சிறிய, நடுத்தர நிறுவனங்கள் 2023 முதல் காலாண்டில் மோசம்

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் 2023 முதல் காலாண்டில் மோசம்

1 mins read
e5818b36-096a-452b-bc74-724002bf9edb
-

சிங்­கப்­பூ­ரின் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளைப் பொறுத்­த­வரை, இந்த ஆண்­டின் முதல் மூன்று மாதங்­கள் சிர­ம­மா­கி­விட்­டன.

பொரு­ளி­யல் வளர்ச்சி சரி­யில்­லா­மல் மெது­வ­டைந்­ததே அதற்­கான கார­ணம் என்று அறிக்கை ஒன்று தெரி­வித்­தது.

ஓசி­பிசி வங்கி, $30 மில்­லி­யன் வரைப்­பட்ட வரு­டாந்­திர விற்­று­மு­த­லைக்கொண்ட ஏறக்­கு­றைய 100,000 உள்­ளூர் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த தக­வல்­க­ளைப் பகுப்­பாய்வு செய்து அட்­ட­வணை ஒன்றை உரு­வாக்­கி­யது.

அதில் ஒட்­டு­மொத்த அள­வாக 49.9 புள்­ளி­களை அது கொடுத்து இருக்­கிறது. அட்­ட­வணை அளவு 50ஐ தாண்­டி­னால் நில­வ­ரங்­கள் மேம்­பட்டு இருப்­ப­தா­கப் பொருள். 50க்கும் குறைந்­தால் அது சென்ற ஆண்டு இதே கால­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு நில­வ­ரங்­கள் சரி­யில்லை என்­ப­தைக் காட்­டு­வ­தாக இருக்­கும்.

அந்த அட்­ட­வணை தொடர்ந்­தாற்­போல் எட்டு காலாண்­டு­களாக 50க்கும் மேற்­பட்ட அள­வு­டனே இருந்து வந்­தது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி­யு­டன் முடி­வுற்ற முதல் காலாண்­டில் அட்­ட­வணை அளவு 50க்கும் கீழ் குறைந்­து­விட்­டது.