குடிநுழைவுக் குற்றங்களை ஒப்புக்கொண்டவருக்கு சிறை

குடிநுழைவுக் குற்றங்களை ஒப்புக்கொண்டவருக்கு சிறை

1 mins read
32d1ecf6-e115-491c-a090-b6790032365a
-

புதிய வாழ்க்­கை­யைத் தொடங்கு ­வ­தற்­காக இந்­தோ­னீ­சி­யா­வுக்­குச் சென்ற சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர், அங்கு அனு­ம­திக்­கப்­பட்ட நாள்­களுக்கு மேல் தங்­கி­னார்.

வேறு அடை­யா­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்தி இரண்டு இந்­தோ­னீ­சிய கட­வுச்­சீட்­டு­க­ளைப் பெற்று அவற்­றைக் கொண்டு 2007 முதல் 2016 வரை பல முறை சிங்­கப்­பூ­ருக்கு வந்து சென்­றார்.

அம்­ரான் அப்­துல் சத்­தார், 52, என்ற அந்த ஆட­வர் எட்டு குடி­நு­ழைவுக் குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்கு 22 வாரம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அம்­ரான் 2004 டிசம்­பர் 28ஆம் தேதி சிங்­கப்­பூர் பாஸ்­போர்ட்டை பயன்­ப­டுத்தி சிங்­கப்­பூ­ரை­விட்டு கடை­சி­யாக இந்­தோ­னீ­சி­யா­வுக்­குச் சென்­றார். அங்கு அவர் மொழி பெயர்ப்­பா­ள­ராக வேலை பார்க்­கத் தொடங்­கி­னார்.

சுமார் இரண்டு மாதம் அந்த நாட்­டில் தங்­கி­யி­ருந்த அவர், தான் அனு­ம­திக்­கப்­பட்ட நாள்­களுக்கு மேல் சட்­ட­வி­ரோ­த­மாக தங்கி இருந்­ததை உணர்ந்­தார்.

நண்­பர் உதவியுடன் இந்­தோ­னீ­சிய அடை­யாள அட்­டையை வாங்கி பாஸ்­போர்ட்டுகளைப் பெற்­றதாகக் கூறப்பட்டது.