நிறுவனத்திற்கு அபராதம்; இயக்குநருக்குச் சிறை

நிறுவனத்திற்கு அபராதம்; இயக்குநருக்குச் சிறை

1 mins read
bf3d1b4a-dd3c-4d26-a33b-a84f080c6e66
-

மது­பா­னத்­தைக் கையா­ளும் ஒரு நிறு­வ­னத்­திற்கு $160,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்டு இருக்­கிறது. அதன் இயக்­கு­ந­ருக்கு ஆறு வாரம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சட்­ட­வி­ரோ­த­மாக ஆடம்­பர பொருள்­களை வட­கொ­ரி­யா­வுக்கு அனுப்­பி­ய­தற்­காக அந்­தத் தண்­டனை கிடைத்­தது.

அந்த நிறு­வ­னம், $1.7 மில்­லி­ய­னுக்­கும் அதிக மதிப்­புள்ள பொருள்­களை வட­கொரி­யா வுக்கு அனுப்­பி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

ஐநா தடை­கள் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் யாரா­வது வட­கொ­ரிய நிறு­வ­னங்­க­ளுக்கு ஆடம்பர பொருள்­களை விற்­றாலோ, அனுப்­பி­னாலோ, மாற்றி அனுப்­பி­னாலோ அந்­தக் காரி­யம் சட்­ட­வி­ரோ­த­மான ஒன்­றா­கக் கரு­தப்­படும்.

'ரிஜோ பெவ­ரஜஸ்' என்ற நிறு­வ­ன­மும் லோ முன் சாங், 43, என்ற அதன் இயக்­கு­ந­ரும் ஏற்­கெ­னவே ஐநா விதி­மு­றை­கள் (தடை­கள் வட­கொ­ரியா) 2010ன் கீழ் குற்­ற­வா­ளி­கள் என்று தீர்ப்­பளிக்­கப்­பட்டு இருந்­தது.

குற்­றச்செயல்­கள் 2016 ஜூலை மாதத்­திற்­கும் 2018 ஜன­வ­ரிக்­கும் இடை­யில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

என்­றா­லும் லோ அந்த நிறு­வ­னத்­தின் ஓர் இயக்­கு­ந­ராக 2019 மே மாதம் தான் பொறுப்­பேற்­றார்.

குற்­றம் நிகழ்ந்­த­போது இயக்கு­நர் பொறுப்­பில் இல்லை என்­றா­லும்­கூட லோ, அந்த நிறு­வ­னத்­தை இயக்கும் தனி நபராக அப்­போது செயல்­பட்­டார் என்று விசா­ர­ணை­யின்­போது குறிப்­பி­டப்­பட்­டது.

லோவுக்கு $100,000 பிணை அனு­ம­திக்­கப்­பட்­டது. அவர் தண்­ட­னையை அனு­ப­விக்க ஏது­வாக ஜூன் மாதம் 9ஆம் தேதி நீதி­மன்­றத்­தில் முன்­னிலை­யா­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.