வியட்னாமைச் சேர்ந்த பான் ஸுவான் பின், 49, என்பவர், 'பிரைம் ஷிப்பிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் ஒன்றின் தலைவராக இருந்தார்.
அவர், 2017ஆம் ஆண்டில் அந்தப் பொறுப்பில் இருந்தபோது US$790,000க்கும் மேற்பட்ட மதிப்புள்ள அல்லது ஏறக்குறைய S$1.1 மில்லியன் மதிப்புள்ள திருட்டு எரிவாயு எண்ணெய்யைப் பெறுவதற்கு இதர மூன்று பேருடன் சேர்ந்து திட்டம் போட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
திருட்டுப் பொருளை நேர்மைஅற்ற முறையில் பெற்றதாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகள், சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று அவர் மீது சுமத்தப்பட்டன. வழக்கு ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

