சில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டிய நோயாளிகள் படுக்கைக்காகக் காத்திருக்கும் நேரம் கூடியுள்ளது; ஆனால் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கூடுதலானோர் சிக்கலான மருத்துவப் பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
அதோடு, அண்மையில் அதிமானோருக்கு கொவிட்-19 கிருமித்தொற்றும் ஏற்பட்டு வருகிறது.
இந்தக் காரணங்களால் கடந்த இரண்டு வாரங்களில் சராசரியாக மருத்துவமனைகளில் படுக்கைக்காகக் காத்திருக்கும் நேரம் ஐந்திலிருந்து 7.2 மணிநேரத்துக்கு அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (21 ஏப்ரல்) குறிப்பிட்டது.