குடிநுழைவு முறையில் இடையூறு: 85,000 பயணிகள் பாதிப்பு

குடிநுழைவு முறையில் இடையூறு: 85,000 பயணிகள் பாதிப்பு

2 mins read
845b89ec-176f-4217-a11c-214cdb0bc933
-

குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யத்­தால், குடி­நு­ழைவு அனு­மதி முறை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட மேம்­பாட்­டுப் பணி­க­ளின்­போது மார்ச் 31ஆம் தேதி­யன்று நிகழ்ந்த இடை­யூ­றால் மொத்­தம் தரை­வழி, வான்­வழி 85,000 பய­ணி­கள் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் 113 புறப்­பாட்டு, 111 வருகை விமா­னப் பய­ணங்­களில் 30,000 பய­ணி­கள் பாதிக்­கப்­பட்­ட­னர். 21 பய­ணி­கள் தங்­கள் விமா­னப் பய­ணங்­க­ளைத் தவ­ற­விட்­ட­னர்.

மேலும், உட்­லண்ட்ஸ், துவாஸ் தரை­வழி சோத­னைச் சாவ­டி­கள் வழி­யா­கச் சென்ற 55,000 பய­ணி­களும் இந்த இடை­யூ­றால் பாதிக்­கப்­பட்­ட­னர் என்று நேற்று உள்­துறை துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம் நாடாளு­மன்­றத்­தில் விளக்­கி­னார்.

இச்­சம்­ப­வத்­துக்­குப் பிறகு குடி­நு­ழைவு அனு­மதி மேம்­பாட்­டுப் பணி மறு­ஆய்வு செய்­யப்­ப­டு­கிறது என்­றும் அவர் கூறி­னார்.

இச்­சம்­ப­வம் குறித்து உறுப்­பி­னர்­கள் கேட்ட கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர், குடி­நு­ழைவு அனு­மதி முறை மேம்­பாட்­டுப் பணி­கள், பன்­முறை உட­லு­றுப்பு அடை­யாள முறை­யின் சிறந்த செய­லாக்­கத்­துக்­குத் தேவைப்­ப­டு­கிறது. அவ்­வாறு சோதனை மேற்­கொள்­ளப்­ப­டும்­போது, அன்று காலை 10.40 மணிக்கு, தரவு சேமிப்பு முறை­யில் அதிக சுமை ஏற்­றப்­பட்­ட­தால் இடை­யூறு ஏற்­பட்­டது. உட­ன­டி­யாக சோதனை முறை நிறுத்­தப்­பட்­டது.

இது­போன்ற தடை ஏற்­ப­டு­மா­யின், 30 நிமி­டங்­க­ளுக்­குள் அதை சரி­செய்ய குத்­த­கை­தா­ரர்­கள் தயார்­நி­லை­யில் இருப்­பார்­கள். ஆனால், எதிர்­பா­ராத வித­மாக அந்­தத் தடை நாலரை மணி­நே­ரத்­துக்கு நீடித்­தது என்­றார் இணைப் பேரா­சி­ரி­யர் ஃபைஷல்.

தானி­யங்கி குடி­நு­ழைவு முறை­யில் தடை ஏற்­பட்­ட­வு­டன், ஆணை­யம் உட­ன­டி­யாக பணி­யில் இல்­லாத அதி­கா­ரி­களை உடனே வேலைக்கு அழைத்து, குடி­நு­ழைவு முகப்­பு­களில் நிறுத்­தி­யது.

இருப்­பி­னும், எல்லா முகப்­பு­க­ளி­லும் தடை ஏற்­ப­ட­வில்லை. கார­ணம், வெவ்­வேறு மாதிரி சாத­னங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன என்­றார் அமைச்­சர்.

விமானத்தைத் தவறவிட்ட 21 பயணிகள் ஒரு வாரத்துக்குள் மாற்று பயணத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது.