கேலாங் சிராய் ரமலான் சந்தை: வாடகை விவரங்கள் தெரியும்

கேலாங் சிராய் ரமலான் சந்தை: வாடகை விவரங்கள் தெரியும்

2 mins read
67e91a34-519c-48e3-84e3-2b9a729b1432
-

கேலாங் சிராய் ரம­லான் சந்­தை­களில் உள்ள பல கடைக்­கா­ரர்­கள் அனு­ப­வம் வாய்ந்­த­வர்­கள். மக்­கள் கழ­கம் ஏற்­பாடு செய்த முந்­தைய ஆண்டு சந்­தை­கள் அல்­லது பிற வர்த்­தக கண்­காட்சி­களில் கடை­களை நடத்தி­ உள்­ள­னர் என்று மக்­கள் கழ­கத் துணைத் தலை­வர் எட்­வின் டோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளார்.

ஒரு கடையை ஏலக்­குத்­த­கைக்கு எடுப்­ப­தற்கு முன், ஏலச் செயல்­பாட்­டின்போது, ​​நடத்­து­நர்­களால் வெளி­யி­டப்­பட்ட வாடகை விவ­ரங்­களைக் கடைக்காரர்கள் அறிந்­தி­ருப்­பார்­கள்.

வர்த்­தக கண்­காட்­சி­கள், சந்தை­க­ளின் ஸ்டால் கடை­கள், கடைக்­கா­ரர்­க­ளுக்கு கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய வாட­கை­யில் இருப்­பதை எவ்­வாறு மக்­கள் கழ­கம் உறு­தி­செய்­கிறது என்­ற அல்­ஜு­னிட் குழுத் தொகுதி நாடாளு­மன்ற உறுப்­பி­னர் முஹம்­மது ஃபைசல் மனாப்­பின் கேள்­விக்­குப் பதி­ல­ளித்­த­போது கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்­ச­ருமான திரு டோங் இதனைக் கூறினார்.

$24,000வரை வாடகை உயர்ந்­தி­ருப்­ப­தாக கடைக்காரர்கள் புகார் அளித்­துள்­ள­தாக சிலர் கூறு­கின்­ற­னர். ஆனால் கடைக்­காரர்­கள் தாங்­கள் செலுத்த வேண்­டிய தொகையை அறிந்­திருப்­பர். நடத்­து­நர்­கள் வெளிப்­ப­டை­யான ஏலச் செயல்­முறை மூலம் இந்த ஏலக்­குத்­த­கையை வென்­றனர். இது சந்தை விலையைப் பிரதி­ ப­லிக்­கிறது என்று திரு டோங் கூறி­னார்.

ஸ்டால் கடையை ஏலம் எடுக்க விரும்­பு­வோர், வர்த்­தக கண்­காட்சி அல்­லது சந்தை எந்­தெந்த இடங்­களில் நடத்­தப்­ப­டு­கிறது என்­பது குறித்­தும் முன்­கூட்­டியே தெரிந்­தி­ருப்­பர்.

சந்­தையை நிர்­வ­கிக்­க­வும் நடத்­த­வும் சிறந்த நிபு­ணத்­து­வம், அனு­ப­வம், பரிந்­து­ரை­க­ளு­டன் கொண்­டி­ருக்­கும் குத்­த­கை­தா­ர­ரைப் பெறு­வதே முக்­கி­ய­மா­னது. அதி­க­மான தொகையை நிர்­ண­யித்­த­வ­ருக்கே குத்­தகை கிடைக்­கும் என்­ப­தில்லை.

இந்த ஆண்டு, எஸ்-லைட் இவெண்ட் சப்­போர்ட், டிஎல்கே டிரேட் ஃபேர் அண்ட் இவெண்ட்ஸ், என்­னிச் குளோ­பல் டிரே­டிங் ஆகி­யவை இணைந்த கூட்­ட­மைப்­பிற்கு ஏலக்­குத்­தகை வழங்­கப்­பட்­டது. இது அதி­க­மான தொகையை நிர்­ண­யித்த அமைப்­பல்ல என்று திரு டோங் கூறி­னார்.

மக்­கள் கழ­கத்­தின் தலை­மை­யில் கேலாங் சிரா­யின் சமூக, கலா­சார பாரம்­ப­ரிய மைய­மான விஸ்மா கேலாங் சிராய் இந்த நிகழ்வை ஏற்­பாடு செய்­துள்­ளது என்­றார் அவர்.