ஆண்ட்ரு சூ செங் அய், 51, என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானி, வருமான வரி கட்டாமல் ஏமாற்றினார். அவருடைய வாடகை சொத்து விவரங்களைக் கேட்டபோது பொய்யான ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.
ஆண்ட்ரு சூ, வருமான வரிச் சட்டத்தின்கீழ் நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. $181,996 தொகையைச் செலுத்தும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.

