தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆப்டஸ் நிறுவனத்திற்கு எதிராக கூட்டு வழக்கு

1 mins read
4c29923b-72a6-41b7-8e9b-e22636d51027
-

சிங்­டெல் நிறுவனத்­தின் துணை நிறு­வ­ன­மான ஆஸ்­தி­ரே­லி­யா­வின் 'ஆப்­டஸ்' தொலைத் தொடர்பு நிறு­வ­னத்­திற்கு எதி­ராக 100,000 பேருக்­கும் மேற்­பட்ட இப்­போ­தைய, முன்­னாள் வாடிக்கை யாளர்­கள் சேர்ந்து வழக்குத் தொடுத்­துள்­ள­னர்.

சென்ற ஆண்­டில் இடம்­பெற்ற இணை­யப் பாது­காப்பு மீறல் கார­ண­மாக கிட்­டத்­தட்ட 1.2 மில்­லி­யன் வாடிக்­கை­யா­ளர்கள் பாதிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இதன் தொடர்­பில் வழக்குத் தொட­ரப்­ப­டு­வ­தாக வழக்­க­றி­ஞர்­கள் கூறி­னர்.

ஆப்­டஸ் தொடங்கி பல இணை­யப் பாது­காப்பு ஊடு­ரு­வல்­கள் இடம்­பெற்று ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நிறு­வ­னத் துறை­யின் மில்­லி­யன்கணக்­கான வாடிக்­கை­யா­ளர்­க­ளின் விவ­ரங்­கள் கசிந்­த­தாகக் கூறப்­பட்­டது.

அதன் விளை­வாக ஆஸ்­திரே­லிய அரசு புதிய இணை­யப் பாது­காப்பு அமைப்பு ஒன்றை ஏற்­படுத்த வேண்­டி­ய­தா­யிற்று.

இத­னி­டையே, இதுபற்றி அறிக்­கை­யில் கருத்து தெரி­வித்த ஆப்­டஸ், எந்தக் கூட்டு வழக்­கை­யும் எதிர்த்து நிறு­வனம் தற்­காத்து வாதா­டும் என்­று தெரிவித்தது.