ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் அளித்த நோன்புப் பெருநாள் பொது வரவேற்பு விருந்தில் சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (இடது), மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (படத்தில் வலக்கோடி) கலந்துகொண்டனர்.
கொவிட்-19 காரணமாக மூன்றாண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டில் ஜோகூர் சுல்தான் பொது வரவேற்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஜோகூர் சுல்தான் இருப்பிடமான புக்கிட் செரினில் அந்த நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சுல்தானை சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர்.
பிறகு இடம்பெற்ற விருந்தில் சுல்தான் (வலமிருந்து 2வது), அவரின் துணைவியார் ராஜா ஸரித் சோஃபியா, அரச குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, சிங்கப்பூர் அமைச்சர்களின் இந்த வருகை சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையில் நிலவி வரும் மனமுவந்த, நீண்டகால உறவை மறுஉறுதிப்படுத்துவதாக வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் நேற்று தெரிவித்தது.
படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

