2,000 மின்னேற்றி நிலையங்கள் இலக்கு; 2023ல் நிறைவேறும்

1 mins read
ce97f595-4754-4583-b962-29d340541784
-

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டில் 12 வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக கார் பேட்­டை­களில் 30க்கும் மேற்­பட்ட புதிய மின்­னேற்றி நிலை­யங்­கள் அமைக்­கப்­பட்டு உள்­ளன.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், இந்த ஆண்டு முடிவு வாக்­கில் 700க்கும் மேற்­பட்ட வீவக கார் பேட்­டை­களில் 2,000 மின்­னேற்றி நிலை­யங்­களை அமைக்க இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது.

இது­வ­ரை­யில் 30 நிலை­யங்­கள்­தான் அமைக்­கப்­பட்டு உள்ளன என்­றா­லும் தன்­னு­டைய திட்­டம் சரி­யானபடி முன்­னேற்­றம் கண்டு வரு­வ­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

வரும் 2025ஆம் ஆண்டு முடிவு வாக்­கில் கிட்­டத்­தட்ட 2,000 வீவக கார் பேட்­டை­களில் குறைந்­த­பட்­சம் 12,000 மின்­னேற்றி நிலை­யங்­களை அமைக்க ஐந்து நிறு­வ­னங்­க­ளுக்கு 10 ஆண்டு குத்­தகை கொடுக்­கப்­பட்டுள்ளது.