அட்சய திரிதியை நாளன்று தங்கம் வாங்க குவிந்தவர்கள்

அட்சய திரிதியை நாளன்று தங்கம் வாங்க குவிந்தவர்கள்

2 mins read
8b809bcf-d822-469f-bc8b-8481fcfc75f2
-

மோன­லிசா

அட்­ச­ய­ தி­ரி­தியை அன்று தங்­கம் வாங்­கி­னால் அந்த ஆண்­டு­தோ­றும் குடும்பத்தில் செல்வம் பெரு­கும் என்ற நம்­பிக்கை மக்­க­ளி­டையே நில­வு­கிறது. கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் முழு­வ­து­மாக தளர்ந்­துள்ள நிலை­யில் இவ்­வாண்­டின் அட்­ச­ய­ தி­ரி­தியையை மக்­கள் வழக்க நிலை­யில் வர­வேற்று மகிழ்ந்­த­னர்.

அவ்­வ­கை­யில் இவ்­வாண்­டின் லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள தங்க நகைக் கடை­கள் நேற்றும் நேற்று முன்தினமும் மக்­கள் வெள்­ளத்­தில் நிரம்பி வழிந்­தன.

'சூன் ஹூவாட்' நகைக் கடை­யில் நிற்­ப­தற்குக்கூட இடம் இல்­லாத அள­விற்கு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் நெடு­நே­ரம் காத்­தி­ருந்து வரி­சை­யில் நின்று தங்­கம் வாங்­கிச் சென்­ற­னர்.

கடந்த 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக கட்­டு­மா­னத்­து­றை­யில் சாயம் பூசு­ப­வ­ராகப் பணி­பு­ரி­யும் ஜெக­தீ­சன் மாரி­முத்து, 49, "முதன்­மு­த­லில் நான் சிங்­கப்­பூ­ருக்கு வேலைக்கு வந்­தி­ருந்­த­போது என் நண்­பர் இக்­க­டையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். ஒவ்­வொரு முறை குடும்­பத்­தி­ன­ருக்கு இங்கு வாங்­கும்­போ­தும் நியா­ய­மான விலை­யிலேயே வாங்­கி­யுள்­ளேன்," என்று கூறி­னார்.

இதே­போல் ஏழு ஆண்­டு­களாக கட்­டு­மா­னத்­ து­றை­யில் பத்­தி­ரித் தொழி­லா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் பால­மு­ரு­கன் ஜெய­ரா­மன், 33, "இந்­தக் கடை­யில் வேலை­பார்ப்­ப­வர்­கள் சீனர்­களாக இருந்­தா­லும்­கூட, எளிய ஆங்­கி­லத்­தில் பேசி, எங்­க­ளுக்­குப் புரிய வைப்­பார்­கள்," என்று கூறி­னார்.

இதே­போல் லிட்­டில் இந்­தியா பகு­தி­யின் மற்ற நகைக் கடை­களி­லும் மக்­கள் நிறைந்­தி­ருந்­த­னர்.

இது குறித்து அணி­மணி பொற்­சாலை நகைக்­க­டை­யின் இயக்­கு­நர் சுப்­பையா ராமு, 58, "இவ்­வாண்டு, கடந்த ஆண்­டு­களை­விட அதிக மக்­கள் நேரில் வந்து நகை வாங்­கிச் சென்­ற­னர். மக்­களை கவ­ரும் வண்­ணம் குறைந்த செய்­கூலி சேதா­ர­மும் பரி­சு­களும் வழங்­கி­னோம்," என்று கூறி­னார்.

"இந்த ஆண்­டின் அட்­ச­ய­ தி­ரி­தியை இரண்டு நாள்­கள் நீடித்ததால், குறிப்­பாக பொது விடு­முறை­யின்போது வந்­த­தால் அதிக மக்­கள் நேர­டி­யாகக் கடைக்கு வந்து நகை­ வாங்க ஏது­வாக இருந்தது.

"புதி­தாக நகை வாங்­கு­வோ­ரின் எண்­ணிக்கை வழக்­கத்­தைக் காட்­டி­லும் சற்­றுக் குறை­வாக இருந்­தது. தங்­க­விலை உயர்­வும் ஜிஎஸ்டி உயர்­வும் இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம்," என்று கூறி­னார் அபி­ராமி ஜுவல்­லர்ஸ் நிறு­வ­னத்­தின் நிதி இயக்­கு­நர் ராஜ­லட்­சுமி கண்­ணப்­பன், 34.

"ஒவ்­வோர் ஆண்­டும் இந்த நாளில் நகை­கள் வாங்கு­வது மன­நி­றைவை அளிக்கிறது. பல ஆண்டுகளாக எங்கள் குடும்பம் இதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளோம்," என்றார் தனி­யார் உண­வ­கத்­தில் மேற்­பார்­வை­யாளராகப் பணியாற்றும் ­சரஸ்­வதி அங்­க­னாதி, 55.