சிக்லாப் சவுத் நடுவத்தில் புதிய சமூக நிலையம், விளையாட்டு வசதிகள்
சிக்லாப் சவுத் பகுதியில் அமைக் கப்பட உள்ள ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தில் ஒரு புதிய சமூக நிலையம், விளையாட்டு வசதிகள் ஆகியவை கட்டப்படவிருக்கின்றன. அந்தக் கட்டுமானப் பணிகள் 2028 அல்லது 2029ல் நிறைவு பெறும். அந்தப் புதிய நடுவம் அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில், தற்போதுள்ள திறந்தவெளி கார் நிறுத்தும் இடத்தில், ஷெல் பெட்ரோல் நிலையத்துக்குப் பக்கத்தில் அமையும்.
அந்த இடத்திலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் உள்ள தற்போதைய சிக்லாப் சவுத் சமூக நிலையம், புதிய சமூக நிலையம் அமைக்கப்பட்டவுடன் இடிக்கப்படும். தற்போதைய சமூக நிலையம் (படம்) 1960ல் கட்டப்பட்டது என்றும் அதன் வசதிகள் பழையதாகிவிட்டன என்றும் குடியிருப் பாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய சமூக நிலையம் பெரிய இடத்தில் அமைக்கப்படும் என்றும் சிங்கப்பூர் நில ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்ததாக தி சண்டே டைம்ஸ் தெரிவித்தது.
ஐந்தில் ஒரு குடும்பம்தான் இலவச மறுசுழற்சி பெட்டியைப் பெற்றுக்கொண்டது
தேசிய சுற்றுப்புற வாரியம் விநியோ கிக்கும் மறுசுழற்சிப் பெட்டிகளை இதுவரை சுமார் 300,000 குடும்பங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளன. பெட்டிகளைப் பெற்றுக்கொள்ளும் காலம் இம்மாதம் 30ஆம் தேதியன்று முடிவடைகிறது. 300,000 குடும்பங்கள் என்பது 1.39 மில்லியன் குடும்பங்களில் சுமார் 20%.
'புளுபாக்ஸ்' என்று அழைக்கப்படும் இந்தப் பெட்டி (படம்), மறுசுழற்சி முயற்சிகளை மேம்படுத்தாது என்று
தி சண்டே டைம்சிடம் பேசிய மக்களில் பலர் கருத்துத் தெரிவித்தனர். வேறு சிலரோ, தங்கள் வீட்டில் மறுசுழற்சி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால் 'புளுபாக்ஸ்' தேவைப் படாது என்றனர்.
அந்தப் பெட்டியில் ஐந்து கிலோ வரை காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி, மின்னணுப் பொருள்கள் ஆகிய வற்றை வைக்கலாம். அந்தப் பெட்டி, மறுசுழற்சிப் பொருள் களால் நிரம்பியவுடன், பெட்டியில் உள்ள பொருள்களை புளோக்கின் கீழே வைக்கப்பட்டுள்ள பெரிய மறுசுழற்சிப் பெட்டிக்குள் போட்டுவிடலாம். மறுசுழற்சிப் பெட்டிகளை விநியோகிக்கும் சாதனங்கள் எங்குள்ளன என்பதை தெரிந்துகொள்ள குடியிருப்பாளர்கள் gowhere.gov.sg/bloobox எனும் இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்.
$100,000 திருட்டு; விமானத்தில் இருந்த சந்தேகநபர்கள் கைது
நாணயம் மாற்று வணிகரிடம் இருந்து கிட்டத்தட்ட $100,000 திருடிவிட்டு சிங்கப்பூரைவிட்டு தப்பிக்க முயன்ற இரண்டு சந்தேகநபர்கள் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சாங்கி விமான நிலையத்தில் பிராங்க்ஃபர்ட் நகருக்குச் செல்லும் விமானத்திற்குள் இருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் 21ஆம் தேதி ஆடவர்கள் இருவரும் கோல்மன் ஸ்திரீட்டிலுள்ள ஒரு நாணயமாற்று வணிகரிடம் பணத்தைத் திருடிவிட்டதாகக் காவல்துறைக்கு புகார் வந்ததாக அதிகாரிகள் கூறினர். 45 மற்றும் 54 வயது சந்தேகநபர்கள் நாணயமாற்று வணிகரிடம் தங்களுக்கு 75,000 அமெரிக்க டாலர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். வணிகரும் அதற்கு ஏற்பாடு செய்ய, ஏப்ரல் 21ஆம் தேதி சந்தேகநபர்கள் பணத்தை மாற்றுவதுபோல் கடைக்கு வந்தனர். அமெரிக்க டாலரைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, பணத்திற்கு தேவையான சிங்கப்பூர் வெள்ளி எடுத்து வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.
ஆனால், ஆடவர்கள் அமெரிக்க டாலர்களைப் பார்வையிடும்போதே நூதனமாகப் பணத்தைத் திருடியுள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு ஆடவர்கள் வராததால் தம்மிடம் இருந்த அமெரிக்க டாலரை சரிபார்த்துள்ளார் வணிகர். அப்போதுதான் பணம் திருடுபோனது அவருக்குத் தெரிந்தது. வணிகர் உடனடியாகக் காவல்துறையில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சந்தேகநபர்களை கைது செய்தனர். சந்தேகநபர்களிடமிருந்து பணமும் மீட்கப்பட்டது.

