பொது இடங்களில் தூங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது

பொது இடங்களில் தூங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது

2 mins read
851a936f-c74e-4b75-b5c0-ca4a12e230ff
-

இர­வில் பொது இடங்­களில் தூங்­கு­வோ­ரின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு 40% குறைந்து 530 பேர் ஆனது. இது 2019ல் 921 பேராக இருந்­தது என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரியவந்­தது.

குடும்ப உறுப்­பி­னர்­க­ளு­டன் அல்­லது உடன் தங்­கி­யி­ருப்­போ­ரு­டன் வாக்­கு­வா­தம், நிரந்த வீடு இல்­லாமை அல்­லது வீட்­டின் செல­வு­க­ளுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமை, நிதிப் பிரச்­சி­னை­கள் முத­லி­யவை இர­வில் பொது இடங்­களில் தூங்குவதற்குரிய கார­ணங்­கள் என்று கூறிய அமைச்சு, ஓர் இர­வில் எங்­கெல்­லாம் மக்­கள் பொது இடங்­களில் தூங்­கு­கி­றார்­கள் என்று கணக்­கெ­டுத்து, அதனை வைத்து கடந்த ஆண்டு நவம்­ப­ரில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

பொது இடங்­களில் தூங்கு­வோ­ருக்கு உதவி வழங்­கும் முயற்­சி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்ள வேளை­யில், ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் சுமார் பாதிப் பேர் தாங்­கள் சமூக அள­விலோ அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்தோ எந்த உத­வி­யை­யும் நாட­வில்லை என்­றனர்.

பொது இடங்­களில் தூங்­கு­வோ­ரில் பெரும்­பா­லோர் நடுத்­தர வய­து­டை­ய­வர்­க­ளா­க­வும் முதிய சீனர்­க­ளா­க­வும் உள்­ள­னர். அந்த விவ­ரம் 2019, 2021ஆம் ஆண்­டு­களில் லீ குவான் இயூ பொதுக் கொள்கை பள்ளி நடத்­திய முன்­னைய ஆய்­வு­க­ளு­டன் ஒத்­தி­ருந்­தது.

2019ஆம் ஆண்டு ஆய்­வின்­படி, 921 பேர் தீவு முழு­தும் உள்ள பொது இடங்­களில் தூங்­கி­னர். 2021ஆம் ஆண்டு ஆய்­வின்­படி, 616 பேர் அவ்­வாறு பொது இடங்­களில் தூங்­கி­னர்.

ஆகக் கடை­சி­யாக நடத்­தப்­பட்ட ஆய்­வில், இர­வில் பொது இடங்­களில் தூங்­கு­வோ­ரில் கிட்­டத்­தட்ட பாதிப் பேரை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்­கு­கள், வெற்­றுத் தளங்­கள், படிக்­கட்­டு­கள், விளை­யாட்டு இடங்­கள், உடற்­பயிற்­சிக் கூடங்­களில் பார்க்­க­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அவர்­களில் கால்­வாசிப் பேர் பூங்­காக்­க­ளி­லும் அம­ரும் இடங்­களி­லும் காணப்­பட்­ட­னர். 12 விழுக்­காட்டி­னர் கடைத்­தொகுதி­கள் போன்ற வணிக வளா­கங்­ க­ளி­லும் 11 விழுக்­காட்­டி­னர் உணவு நிலை­யங்­கள், சந்­தை­கள் ஆகி­ய­வற்­றி­லும் காணப்­பட்­ட­னர்.

பெரும்­பா­லா­ன­வர்­கள் கூரை­யு­டன் கூடிய இடங்­க­ளி­லும் நல்ல வெளிச்­சம் உள்ள இடங்­களி­லும் தூங்­கி­னர். அவர்­கள் விருப்பப்பட்டே வெளிச்­ச­மான இடங்­க­ளை­யும் வச­தி­கள் உள்ள இடங்­க­ளை­யும் தேர்வு செய்­கிறார்­கள்.

முன்­னைய ஆய்­வு­க­ளின்­படி, இர­வில் பொது இடங்­களில் தூங்கு­வோர் பெரிய, பழைய அக்­கம்­பக்­கங்­களில் காணப்­பட்­டா­லும் 2022 ஆய்­வு­க­ளின்­படி அந்த பாணி மாறி­யி­ருந்­தது.

காலாங், கேலாங், புக்­கிட் மேரா, தென்­தீ­வு­கள், தெம்­ப­னிஸ் ஆகி­ய­வையே ஆக அதி­க­மாக இர­வில் பொது இடங்­களில் தூங்கு­வோரை ஈர்த்­துள்­ளன.

கடந்த ஆண்டு நவம்­ப­ரில் நடத்­தப்­பட்ட பொது இடங்­களில் தூங்­கு­வோ­ரைக் கண்­டு­பி­டிக்­கும் நட­வ­டிக்­கை­யில் பயிற்சி பெற்ற 860 தொண்­டூ­ழி­யர்­கள் ஈடு­பட்­ட­னர். அவர்­களில் 'பியர்ஸ்' எனப்­படும் இர­வில் பொது இடங்­களில் தூங்­கு­வோ­ரைக் கண்­டு­பி­டித்து ஆத­ர­வ­ளிக்­கும் கட்­ட­மைப்பு, சமூகப் பங்­கா­ளி­கள், கல்­வி­யா­ளர்­கள், பொது­மக்­கள் ஆகி­யோ­ரும் அடங்­கு­வர்.

'பியர்ஸ்' கட்­ட­மைப்­பில் சமூக குழுக்­கள், சமூக சேவை அமைப்­பு­கள், அர­சாங்க அமைப்­பு­கள் ஆகி­யவை அங்­கம் வகிக்­கின்­றன.