ராஃபிள்ஸ் கல்விக் கழக தங்குவிடுதியில் உள்ள அறைகளின் கதவுகளுக்குச் சாயம் பூசப்பட்ட பிறகு அதிலிருந்து வெளிப்பட்ட வாடை சில மாணவர்களை நோய்வாய்படச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அந்த அறைகளில் தங்கி இருந்தபோது கதவுகளுக்குச் சாயம் பூசப்பட்டதாக அறியப்படுகிறது.
சாயம் பூசும் பணிகடந்த மாதம் தொடங்கியது. தங்களுக்கு இருமல், தொண்டை வலி, தலை சுற்றல்.
காது அடைப்பு, கண் எரிச்சல், தூக்கமின்மை ஆகியவை ஏற்பட்டதாக பீஷான் வட்டாரத்தில் உள்ள அந்தத் தங்குவிடுதியில் தங்கும் யுனோயா தொடக்கக்கல்லூரி மாணவர்கள் நால்வர் கூறியதாக சீனமொழி நாளிதழ் சாவ்பாவ் தெரிவித்தது.
தமக்கு மேல் சுவாசக்குழாய் அழற்சி ஏற்பட்டதாக மாணவர் ஒருவர் கூறியதாக சாவ்பாவ் தெரிவித்தது. சாயம் பூசும் பணிகள் குறித்து தங்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகள் கூறியதாக அறியப்படுகிறது. இதற்கிடையே, தங்குவிடுதியில் சாயம் பூசம் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தங்குவிடுதியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

