தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'கனிவன்பு சிங்கப்பூரின் சமூகப் பண்பாக விளங்க வேண்டும்'

1 mins read
f1d8db77-62d7-4776-b011-960f0b84d74c
-

சிங்­கப்­பூ­ரர்­கள் கனி­வன்­பை­யும் ஆக்­க­க­ர­மான நடத்­தை­யை­யும் சமூ­கப் பண்­பு­க­ளா­கக் கொண்டு இ­ருக்க வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் வலி­யுறுத்­தி­யுள்­ளார்.

தேசிய அள­வில் இப்­பண்­பு­களை வெளிப்­ப­டுத்­தக்கூடிய நட­வ­டிக்­கை­கள் சுய விழிப்­பு­உணர்வு எனும் முதிர்ச்சி பெற்ற நிலை­யைப் பிர­தி­ப­லிக்­கும் என்­றார் அவர்.

பிற­ரி­டம் கனி­வோடு நடந்­து­கொள்­வ­தன் மூலம் மேம்­பட்ட, மகிழ்ச்­சி­யான வாழ்க்­கையை வாழ முடி­யும் என்­பதை சிங்­கப்­பூ­ரர்­கள் புரிந்­து­கொள்­ள­வும் அத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் உத­வும் என்­றார் அமைச்­சர்.

நேற்று நடை­பெற்ற முத­லா­வது தேசிய கனி­வன்­புக் கருத்­த­ரங்­கின் நிறைவு நிகழ்ச்­சி­யில் அவர் உரை­யாற்­றி­னார். சிங்­கப்­பூர் கனி­வன்பு இயக்­க­மும் மகிழ்ச்­சிக்­கான திட்­ட­மும் ஏற்­பாடு செய்த நிகழ்ச்­சி­யின் கருப்­பொ­ருள் 'கனி­வான மக்­கள், மகிழ்ச்­சி­யான வேலை­யி­டம்' என்­ப­தா­கும்.

கனி­வன்பு இயக்­கம் என்­பது குறிப்­பிட்ட சில நடத்­தை­க­ளோடு தொடங்­கும் எனக் குறிப்­பிட்ட திரு ஓங், குப்பை போடக்­கூ­டாது, எச்­சில் துப்­பக்­கூ­டாது, பேருந்து அல்­லது ரயி­லில் இருக்­கையை தேவைப்­ப­டு­வோ­ருக்கு விட்­டுக்­கொ­டுத்­தல் போன்­ற­வற்­றைச் சுட்­டி­னார்.

உணவு உண்ட பின் தட்­டு­களைத் திரும்ப வைத்­தல், மின்­னி­லக்­கக் கட்­ட­ணத்­­திற்கு முன்­னு­ரிமை, சுகா­தா­ரத் துறை ஊழி­யர்­க­ளைத் துன்­பு­றுத்­து­வதை அறவே சகி­த்துக் கொள்ளாமை போன்ற அர­சாங்­கக் கொள்­கை­களை அமைச்­சர் சுட்­டி­னார்.

மருத்­து­வ­ம­னை­ச் சூழ­லில் கவலை காரணமாக சிலர் கட்­டுப்­பாட்டை இழக்­கக்­கூடும் என்­றா­லும் துன்­பு­றுத்­தல் சுகா­தார ஊழி­யர்­க­ளின் மன­வு­ளைச்­சலை அதி­க­ரிக்­கும் என்றாரவர்.

அனை­வ­ரும் ஒன்­று­பட்டு துன்­பு­றுத்­தலை எதிர்க்­க­வேண்­டும் என்­று அமைச்சர் வலியுறுத்தினார்.