சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையமும் சிங்கப்பூர் துறைமுகத்தை நிர்வகிக்கும் 'பிஎஸ்ஏ சிங்கப்பூர்' நிறுவனமும் அவற்றுக்கு இடையிலான 12 ஆண்டுப் பங்காளித்துவத்தை மறுஉறுதிப்படுத்தி உள்ளன.
துறைமுகத் தொழில்நுட்ப ஆய்வு, மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இரு தரப்பும் தலா $12 மில்லியன் நிதியை ஒதுக்க இணக்கம் கண்டுள்ளன. சிங்கப்பூர் கடல்துறை வார நிகழ்ச்சியில் நேற்று அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இயந்திர மனிதவியல், மின்னிலக்கத் தீர்வுகள், நீடித்த நிலைத்தன்மை ஆகியவை தொடர்பான ஆய்வுகளுக்கு அந்த நிதி பயன்படுத்தப்படும் என்று கையெழுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதி, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சீ ஹோங் டாட் கூறினார்.

