ஜிஎஸ்டி பற்றி எதிர்க்கட்சியின் நிலைப்பாடு குறித்து மசெக - பாட்டாளிக் கட்சி வாக்குவாதம்

ஜிஎஸ்டி பற்றி எதிர்க்கட்சியின் நிலைப்பாடு குறித்து மசெக - பாட்டாளிக் கட்சி வாக்குவாதம்

3 mins read
27efb7ab-545e-4564-b810-967721b9de46
-

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்­பில் ஆளும் மக்­கள் செயல் கட்­சிக்­கும் எதிர்­க்கட்சி­யான பாட்­டா­ளிக் கட்­சிக்­கும் இடையே மீண்­டும் வாக்­கு­வா­தம் தலை­யெ­டுத்­துள்­ளது.

தங்­கள் நிலைப்­பாட்­டி­லி­ருந்து ஓர் அர­சி­யல் கட்சி மாற முடிவு செய்­தால் அதை வெளிப்­ப­டை­யா­கத் தெரி­விக்க வேண்­டும். அது­தான் சிங்­கப்­பூ­ரின் ஜன­நா­ய­கத்­தில் நிலை­நாட்­டப்­பட வேண்­டி­யது என்­ப­தில்­தான் வாக்­கு­வா­தம் மையம் கொண்டுள்ளது.

அதி­ப­ரின் உரை மீதான நாடா­ளு­மன்ற விவா­தம் நடந்து ஒரு வாரம் கடந்த பிறகு, அப்­போது பாட்­டா­ளிக் கட்சி கூறி­யது தொடர்­பில் நிதி, போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் நேற்று முன்­தி­னம் மக்­கள் செயல் கட்­சி­யின் 'பெட்­டிர்' வலைப்­ப­தி­வில் ஒரு கட்­டு­ரையை எழு­தி­யி­ருந்­தார்.

நாடா­ளு­மன்ற விவா­தத்­தின்­போது, பாட்­டா­ளிக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோன் பெரேரா, ஜிஎஸ்டி 7 விழுக்­கா­டாக இருப்­ப­தன் நியா­யத்தை 2018ஆம் ஆண்­டி­லி­ருந்து தமது கட்சி ஏற்­றுக்­கொண்­டுள்­ளது என்று கூறி­யதை மேற்­கோள் காட்­டிய திரு சீ, அது அந்­தக் கட்­சி­யின் நிலைப்­பாட்­டில் ஒரு பெரிய, வர­வேற்­கத்­தக்க கொள்கை மாற்­றம் என்று அந்­தப் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இதன் தொடர்­பில் பாட்­டா­ளிக் கட்சி நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், தாங்­கள் எப்­போ­துமே தங்­கள் நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருந்து வந்­துள்­ளோம் என்­றும் இது தொடர்­பாக திரு சீ, நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பா­மல், இப்­போது கருத்து கூறு­வது தங்­க­ளுக்கு வியப்­பாக இருக்­கிறது என்றும் தெரி­வித்­தது.

அமைச்­சர் சீ தமது பதி­வில், கடந்த வியா­ழக்­கி­ழமை நாடா­ளு­மன்ற விவா­தத்­துக்கு முன் பாட்­டா­ளிக் கட்சி தான் ஜிஎஸ்­டியை ஏற்­றுக்­கொள்­வ­தாக சொன்­னதே இல்லை என்­றார். 1994ல் ஜிஎஸ்டி அறி­மு­க­மா­ன­தி­லி­ருந்து பாட்­டா­ளிக் கட்சி அதற்கு எதிர்ப்பு தெரி­வித்து வந்­த­தை­யும் அதன் பிறகு வந்த ஒவ்­வொரு ஜிஎஸ்டி அதி­க­ரிப்­பை­யும் எதிர்த்து வந்­த­தை­யும் திரு சீ சுட்­டி­னார்.

"ஆக, அமைச்­சர் ஓங் யி காங்­கின் கேள்­விக்கு, ஜிஎஸ்டி 7 விழுக்­கா­டாக இருப்­ப­தன் நியா­யத்தை 2018ஆம் ஆண்­டி­லி­ருந்து தமது கட்சி ஏற்­றுக்­கொண்­டுள்­ளது என்­றும் இரண்டு விழுக்­காடு ஜிஎஸ்டி உயர்­வுக்­குத்­தான் தமது கட்சி எதிர்ப்பு தெரி­விக்­கிறது என்று சொன்­னது வியப்பை ஏற்­படுத்­தி­யது," என்­றார் திரு சீ.

மேலும் தங்­கள் கட்­சி­யின் நிலைப்­பாட்­டில் மாற்­றம் ஏற்­பட்­டி­ருப்­பது குறித்து ஏன் இது­வரை தெரி­விக்­க­வில்லை என்­றும் மாறாக ஒரு தெளி­வற்ற நிலை­யில் அமை­தி­யாக இருந்­தார்­கள் என்றும் திரு சீ வின­வி­னார்.

"யார் கண்­டார்­கள், இன்­னும் சில ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு பாட்­டா­ளிக் கட்­சி­யின் எதிர்­கால தலை­வர் 9% ஜிஎஸ்­டியை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டும்," என்று சாடிய திரு சீ, ஒரு பொறுப்­புள்ள எதிர்த்­த­ரப்பு தங்­கள் நிலைப்­பாட்­டி­லும் கருத்­து­க­ளி­லும் நேர்­மை­யாக நடந்­து­கொள்ள வேண்­டும் என்­றார்.

இதற்­குப் பதி­ல­ளித்த பாட்­டா­ளிக் கட்சி, 2018 நாடா­ளு­மன்ற விவா­தத்­தின்­போது தாங்­கள் கூறி­ய­தாக சொல்­லப்­ப­டு­வ­தற்கு அப்­போதே விளக்­கம் கேட்­கா­மல் அர­சாங்­கம் ஏன் இப்­போது கேட்­கிறது என்று வின­வி­யது.

"எதிர்க்­கட்சி தலை­வர் பிரித்­தம் சிங் நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­ய­து­போல, ஜிஎஸ்டி தொடர்­பில் தங்­கள் கட்சி கூறி­ய­தற்கு அப்­போதே விளக்­கம் கேட்­கா­மல், இப்­போது அது பற்றி கேட்­பது சிங்­கப்­பூ­ரர்­க­ளைத் திசை திருப்­புவ­தாக உள்­ளது," என்று அக்­கட்சி தனது அறிக்­கை­யில் கூறி­யது.

2018 நாடா­ளு­மன்ற விவா­தத்­தின்­போது தங்­கள் கட்சி ஜிஎஸ்­டியை பூஜ்­ஜி­யம் விழுக்­காட்­டுக்­குக் குறைக்க கேட்கவில்லை. அப்­படி ஒரு­வேளை கட்சி அவ்­வாறு செய்ய நினைத்­தி­ருந்­தால் அதை வெளிப்­ப­டை­யாக செய்­தி­ருக்­கும் என்று பாட்­டா­ளிக் கட்சி கூறி­யது.

"மேலும் கடந்த வாரம் திரு பெரேரா, 2018 நாடா­ளு­மன்ற விவா­தத்­தின்­போது பாட்­டா­ளிக் கட்சி ஜிஎஸ்­டியை பூஜ்­ஜி­யம் விழுக்­காட்­டுக்­குக் குறைக்க கோரிக்கை விடுத்­தது என்று கூறப்­ப­டு­வ­தற்கு ஆதா­ரம் உள்­ளதா என்று கேட்­ட­போது, மசெக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­ட­ம் இருந்து எவ்­வித பதி­லும் இல்லை.

"பாட்­டா­ளிக் கட்சி தங்­கள் நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொண்டு எதிர்­கா­லத்­தில் 9% ஜிஎஸ்­டியை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டும் என்று திரு சீ அனு­மா­ன­மா­கக் கூறி­னார். அதற்கு நாங்­கள் கூறு­வது என்­ன­வென்­றால், இன்று பாட்­டா­ளிக் கட்சி கூறும் சில யோச­னை­க­ளின் அடிப்­ப­டை­யில் மக்­கள் செயல் கட்­சி­யும் எதிர்­காலத்­தில் தனது நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொள்­ளக்­கூ­டும். பாட்­டா­ளிக் கட்­சி­யின் முன்­னைய நிலைப்­பாட்டை முன்­னைய மசெக அர­சாங்­கங்­கள் புதிய கொள்­கை­க­ளாக அறி­விக்­கக்­கூடும்," என்று அக்­கட்சி தனது அறிக்­கை­யில் கூறி­யது.

"பாட்­டா­ளிக் கட்­சி­யின் நிலைப்­பாடு தொடர்­பாக சந்­தே­கம் எழும்­போது, திரு சீ நாடா­ளு­மன்­றத்­தி­லேயே அக்­கட்­சி­யு­டன் விவா­தம் செய்து சந்­தே­கத்­தைத் தீர்த்­துக்­கொள்­வார் என்று நம்­பு­கிறோம். அது­தான் ஒரு சிறந்த அர­சாங்­கத்­துக்கு நல்­ல உதா­ர­ணம்," என்­றும் கட்­சி­யின் அறிக்கை கூறி­யது.