சாலை விபத்தில் 58 வயது கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
புதன்கிழமை காலை 6.50 மணியளவில் பாலஸ்டியர் சாலைக்கு வெளியேறும் பாதைக்கு முன்பு ஆயர் ராஜா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், காருடனும் பேருந்துடனும் மோதியது.
விபத்தில் சிக்கிய பேருந்து ஹுய் லியோங் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது. நியூட்டனில் உள்ள கட்டுமானத் தளத்துக்கு 45 வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து சென்றதாக அந்நிறு வனத்தின் இயக்குநரான டேரி லிம் சொன்னார். சாம்பல் நிற கார் பின்பக்கம் மோதியாகவும் பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
"சாம்பல் நிற கார் முதலில் வெள்ளைநிற காருடன் மோதி நிற்காமல் சென்றது. சிறிது தூரம் ஓடிய பிறகு பேருந்து மீது மோதி நின்றது," என்று பேருந்தை ஓட்டிய வாங் வெய்யை மேற்கோள் காட்டி திரு லிம் சொன்னார்.
பேருந்தில் இருந்து இறங்கி காரில் இருந்த ஓட்டுநரை வாங் பார்த்தபோது அவர் மயங்கிக் கிடந்ததாகவும் ஓட்டுநரின் தலை கார் ஓட்டும் கைப்பிடி மீது சாய்ந்து கிடந்ததாகவும் திரு லிம் தெரிவித்தார்.
அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படையினர் கார் ஓட்டு நரின் இதயத் துடிப்பை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
டான் டோக் செங் மருத்துவ மனைக்கு கார் ஓட்டுநர் மயங்கிய நிலையில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மாண்டார்.

