தனது மகள் நண்பரின் வீட்டில் தங்கி உறங்கியதற்காக ஆத்திர மடைந்த தாயார் அவர் மீது கொதிக்கும் வெந்நீரை வீசினார்.
இதனால் 15 வயது மகளுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. நேற்று ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 42 வயது தாயாருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தாயார் உத்தேசித்துள்ளார். இருவரின் அடையாளங்களும் வெளியிடப்படவில்லை.

