சிங்கப்பூர் பூமலையில் நடந்த ஒரு விநோதமான சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
தன்னை மக்கள் கழகத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஓர் ஆடவர், ஒரு பெண்ணின் பாதத்தைத் தொட்டு படம் பிடித்துள்ளார்.
பாதத்தில் ஊக்கமூட்டும் வார்த்தைகளை எழுதினால் அதைப் படம் பிடித்து வருகிற சிங்கப்பூர் இளையர் படை நிகழ்ச்சியில் பயன்படுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் இளையர் படை, தேசிய இளையர் மன்றத்த்தின் தொண்டூழிய அமைப்பாகும்.
அந்த நிகழ்ச்சியில் படத்தை பதாகையாக வைக்கப்போவதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அதனை தயக்கத்துடன் நம்பிய பெண், தனது பாதத்தில் வார்த்தைகளை எழுதிக் காட்டினார்.
அப்போது புகைப்படும் எடுப் பதற்காக பெண்ணின் பாதத்தைத் தொட்டு அந்த நபர் சரி செய்துள்ளார். இது, பெண்ணுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படம் எடுப்பதாகக் கூறிய நபர் காணொளி எடுப்பது போல தெரிந்ததால் பெண்ணுக்கு சந்தேகம் வலுத்தது. தன்னை நண்பராக ஏற்றுக் கொள்ளும்படியும் அவர் பெண்ணிடம் கேட்டுள்ளார்.
சந்தேக நபர் சென்றவுடன் காவல்துறைக்கு பெண் தகவல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இதுபோன்ற சிங்கப்பூர் இளையர் படையின் நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை என்று மக்கள் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இம்மாதம் 17ஆம் தேதி எண் 1. குளுனி சாலையில் உள்ள சிங்கப்பூர் பூமலையில் நடந்த சம்பவம் தொடர்பில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகவும், இது தொடர்பான விசாரணையில் 35 வயது நபர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
தனது பெயரை வெளியிட மறுத்த 24 வயது பெண், பூமலை போன்ற இடங்களுக்குச் சென்று சஞ்சிகைகளை வாசிப்பது தமது விருப்பமான பொழுதுபோக்கு என்று கூறினார்.
அண்மையில் பல்கலைக் கழக பட்டம் பெற்ற அவர் வேலை தேடி வருகிறார்.
தனது பாதத்தை ஓர் ஆடவர் புகைப்படம் எடுக்க விரும்பியது சங்கடமாக இருந்தாலும் விரைவில் அதை முடித்துவிட விரும்பி யதாக அவர் சொன்னர்.
இதையடுத்து எச்சரிக்கையாக இருக்கும்பட மக்கள் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
"மக்கள் கழகத்தின் ஊழியர்கள் தங்களுடைய பெயர், புகைப்படம் அடங்கிய அடையாளத்தை வைத்திருப்பார்கள். பொதுமக்களுக்கு சந்தேகமிருந்தால் அந்த அடையாளத்தை காட்டச் சொல்லலாம்.
"அருகில் உள்ள சமூக மன்றங்களிலும் கேட்டு சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ளலாம்," என்று மக்கள் கழக பேச்சாளர் ஒருவர் நினைவூட்டினார்.

