தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன்னும் அதிகமான சமூக சேவை அமைப்புகளை ஒருங்கிணைக்கும் புதிய நிதி

2 mins read
357d43ce-a093-462c-95a5-a14b8a7c1868
-

சமூகம், பொது, தொழில்துறை மேலும் சேர்ந்து அறப்பணியில் ஈடுபட ஊக்கமூட்டும்

உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு உதவு­வ­தில் சமூக சேவைத் துறை ஒரு­மித்த கவ­னம் செலுத்­து­வ­தற்­கா­க­வும் தேவைப்­படும் நிதி­யைத் திரட்­டு­வ­தற்­கா­க­வும் 'சமூக உண்டி­யல்' என்ற நிதி 1983ல் அமைக்­கப்­பட்­டது.

அந்த உண்­டி­யல் பல்­கிப் பெருகி இப்­போது நூற்­றுக்­க­ணக்­கான சமூக அமைப்­பு­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கிறது.

அந்த அமைப்­பு­கள் மூலம் கிட்­டத்­தட்ட 100,000 மக்­கள் ஆண்­டு­தோ­றும் பய­ன­டை­கி­றார்­கள்.

சமூ­கச் சேவை அமைப்­பு­களுக்­கும் அவற்­றின் செயல்­திட்­டங்­க­ளுக்­கும் தனித்­த­னி­யாக நிதி­ய­ளிப்­ப­தற்­குப் பதி­லாக அத்­த­கைய அமைப்­பு­களில் மேலும் பல அமைப்­பு­கள் சேர்ந்து செயல்­பட ஊக்­க­மூட்­ட­லாம் என்று இப்­போது சமூக உண்­டி­யல் ஆராய்­கிறது.

இதைக் கருத்­தில் கொண்டு தேசிய சமூ­கச் சேவை மன்­றம் நேற்று புதிய ஒரு நிதி­யைத் தொடங்­கி­யது.

அந்த நிதி, உதவி தேவைப்­படு­வோ­ருக்கு உதவி கிடைக்கும் வகை­யில் சமூக, பொது, தொழில்­துறை ஆகிய மூன்று துறை­களுக்கு இடை­யில் மேலும் ஒத்­து­ழைப்­புக்கு ஊக்­க­மூட்­டும்.

இந்த வகை ஒத்­து­ழைப்­பின் விளை­வாக பல­ன­டை­வோ­ரின் எண்­ணிக்கை பல மடங்­கா­கும் என்று மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம், நேற்று நடந்த புதிய நிதி தொடக்க நிகழ்ச்­சி­யில் குறிப்­பிட்­டார்.

புதி­தாக தொடங்­கப்­பட்டு உள்ள நிதி '4எஸ்டி' (சமூக சேவைத் துறை உத்­திபூர்வ பங்­கா­ளித்­துவ ஊக்­கு­விப்பு நிதி) என்று குறிப்­பி­டப்­ப­டு­கிறது.

"அமைப்­பு­கள் சேர்ந்து ஒத்­துழைத்து செயல்­ப­டு­வ­தன் மூலம் யோச­னை­கள் பல மடங்­கா­கப் பெரு­கும். ஆற்­றல், வளங்­கள் அனைத்­தும் பன்­ம­டங்­காக அதி­கரிக்­கும்.

"இத­னால் அதி­க­மா­ன­வர்­களுக்கு உதவி கிடைக்­கும்.

"அதோடு மட்­டு­மன்றி சேவைத் தர­மும் கூடும். இந்த வகை உறவு­களை உரு­வாக்கி அவற்­றைக் கொண்டு சமூ­கத்தைப் பலப்­படுத்த நாம் விரும்­பு­கி­றோம்," என்று சமூ­கக் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு தர்­மன் குறிப்­பிட்­டார்.

4எஸ்டி பங்­கா­ளித்­துவ நிதிக்காக சமூக உண்­டி­யல் முதற்­கட்­ட­மாக $2 மில்­லி­யன் திரட்டி இருக்­கிறது. கூட்டுத் திட்­டங்­களுக்­காக அந்த நிதி­யைப் பெற சமூக அமைப்­பு­கள் விண்­ணப்­பிக்­க­லாம்.

தனிப்­பட்ட செயல்­திட்­டங்­களுக்­கான நிதி ஆத­ர­வைப் போல் அல்­லா­மல், 4எஸ்டி பங்­காளித்­துவ நிதி, வெவ்­வே­றான நிதி வளங்­க­ளைத் திரட்­டும். அவற்­றைக் கொண்டு அதிக நற்­ப­யன்­களை உண்­டாக்­கக்­கூடிய பெரிய திட்­டங்­க­ளுக்கு அது ஆத­ரவு அளிக்­கும்.

சமூக சேவை அமைப்­பு­க­ளைப் பொறுத்­த­வரை அவை தங்­கள் செயல்­திட்­டங்­களை நிறை­வேற்ற ஒரே இடத்­தில் நிதி­யைப் பெற்­று­வி­ட­லாம். புதிய நிதி தொடக்க நிகழ்ச்­சியை சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நடத்­தி­னார். சமூக உண்­டி­ய­லின் 40வது ஆண்­டைக் குறிக்­கும் வகை­யில் 40 மரக்­கன்று­கள் நடப்­பட்­டன.

ஏஜி­ஓபி என்ற வள்­ளல்­கள் குழு­மம், டிபி­எஸ் வங்கி, என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் அற­நி­று­வ­னம், சிங்­கப்­பூர் பங்­குச் சந்தை, சிங்­டெல் ஆகிய நிறு­வ­னங்­கள் ஒவ்­வொன்­றும் நேற்று $100,000 நன்­கொடை வழங்­கின. நேற்­றைய நிகழ்ச்சி மூலம் சமூக உண்­டி­ய­லுக்கு $1 மில்­லி­ய­னுக்­கும் அதி­கத் தொகை திரண்­டது.

நிறு­வ­னங்­களும் தனி­ந­பர்­களும் www.comchest.gov.sg/sosp என்ற முக­வரி மூலம் சமூக உண்­டி­ய­லுக்கு நன்­கொடை வழங்­க­லாம்.