இன்ஸ்டகிராம், லிங்க்டின் போன்ற சமூக ஊடகங்கள் மிகப் பிரபலமானவை. இதன் காரணமாக காப்புறுதி நிறுவனங்கள் இளையர்களை நிதி ஆலோசகர்களாக நியமிக்க அதிக நாட்டத்துடன் உள்ளன.
அத்தகைய இளைஞர்கள் புதுப்புது தொழில்நுட்பங்களை உடனுக்குடன் கைக்கொள்கிறார்கள். இளைய வாடிக்கையாளர்களுடன் அவர்கள் ஒத்துபோகிறார்கள்.
இதனால் அவர்களைச் சேர்த்துக்கொள்வதில் தாங்கள் மிகுந்த நாட்டம் கொண்டு உள்ளதாக காப்புறுதி நிறுவனங்கள் கூறுகின்றன.
கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம் சென்ற ஆண்டு முடிவு வாக்கில் கிட்டத்தட்ட 1,000 நிதி ஆலோசகர்களை அமர்த்தி இருந்தது. அவர்களுக்கு வயது 21 முதல் 25 வரை.
2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 77% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

