உருமாற்ற முயற்சிகளோடு புது வாய்ப்புகளை பெற முதலாளிகள், ஊழியருக்கு வலியுறுத்து

உருமாற்ற முயற்சிகளோடு புது வாய்ப்புகளை பெற முதலாளிகள், ஊழியருக்கு வலியுறுத்து

2 mins read
620483cb-3958-4366-beba-0d6a19cf3ee1
-

சிங்­கப்­பூர் பொரு­ளி­ய­லும் இதர பொரு­ளி­யல்­களும் இந்த ஆண்டு முழு­மூச்­சில் முற்­றி­லும் திறந்து­விடப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

இந்­தச் சூழ­லில் முத­லா­ளி­கள் தொழில்­துறை உரு­மாற்ற முயற்­சி­க­ளைத் தொடர்ந்து நடை­மு­றைப்­ப­டுத்தி வர­வேண்­டும். அதன்­மூ­லம் புதிய வளர்ச்சி, வாய்ப்­பு­க­ளைக் கைப்பற்றிக் கொள்ள வேண்­டும். உற்­பத்­தித்­தி­றன் மிக்­க­வர்­க­ளா­கத் திகழ வேண்­டும் என்று சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ளத்­தின் தலை­வர் டாக்­டர் ராபர்ட் யாப் தமது மே தினச் செய்­தி­யில் தெரி­வித்து இருக்­கி­றார்.

முத­லா­ளி­கள் உரு­மாற்ற முயற்சி­களை மேற்­கொண்டு சிறந்த வேலை­களை உரு­வாக்க ஆத­ர­வாக தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சு­டன் சேர்ந்து இந்­தச் சம்­மே­ள­னம் செயல்­பட்டு வரு­கிறது என்று அவர் தெரி­வித்­தார்.

புதிய சிறந்த வேலை­க­ளுக்கு புதுப்­புது தேர்ச்­சி­கள் தேவைப்­படும் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டிய அவர், தங்­கள் தொழில்­துறை உரு­மாற்­றப் பய­ணத்­தில் ஊழி­யர்­க­ளை­யும் அர­வ­ணைத்­துக் கொண்டு முதலாளிகள் அவர்­களுக்கு மறு­தேர்ச்சி அளிக்க வேண்­டும் என்றார்.

"அதே­வே­ளை­யில், ஊழி­யர்­களும் தங்­க­ளு­டைய சொந்த மேம்­பாட்­டிற்­குத் தாங்­களே பொறுப்­பெ­டுத்­துக்­கொண்டு முத­லா­ளி­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட்டு புதிய தேர்ச்­சி­களை அடை­யா­ளம் கண்டு அவற்­றைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும்.

"வாழ்­நாள் கல்­வியை அவர்­கள் கைக்­கொள்ள வேண்­டும். இதன்­மூ­லம் எப்­போ­தும் பொருத்­த­மா­ன­வர்­க­ளாக, வேலை கிடைக்­கக்­கூடி­ய­வர்­க­ளாக ஊழி­யர்­கள் திகழ வேண்­டும்," என்று அவர் வலி­யுறுத்­திக் கூறி­னார்.

சிறந்த வேலை­களை உரு­வாக்­கு­வ­தும் ஊழி­யர்­க­ளுக்­குப் புதுப்­புது தேர்ச்­சி­களை அளிப்­பதும் ஒரு­பு­றம் இருக்க, மனி­த­வள அமைச்சு, என்­டி­யுசி ஆகி­ய­வற்றுடன் சேர்ந்து அனைத்து ஊழி­யர்­க­ளுக்­கும் இன்­னும் சிறந்த வாழ்க்­கைத்தொழிலை உரு­வாக்­கித் தர சம்­மே­ள­னம் பாடு­பட்டு வரு­கிறது என்­பதையும் அவர் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் சென்ற ஆண்­டில் 3.6% வளர்ந்­தது. மொத்த வேலை நிய­ம­னங்­கள் சென்ற ஆண்­டில் 231,700 ஆகக் கூடின. வேலை­யின்மை, ஆட்­கு­றைப்பும் குறைந்­தன.

என்­றா­லும் உற்­பத்­தித்­தி­றன் சென்ற ஆண்­டில் 0.8% குறைந்­தது என்­பதை சுட்­டிக்­காட்­டிய திரு ராபர்ட் யாப், தொழில்­துறை உரு­மாற்­றம் மூலம் முத­லா­ளி­கள் உற்­பத்­தித்­தி­றன் மிக்­க­வர்­க­ளா­கத் திகழ வேண்­டும் என்று வலி­யுறுத்­தி­னார்.

முத­லா­ளி­கள் சார்­பில் அனைத்து ஊழி­யர்­க­ளுக்­கும் அவர் மே தின வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.