சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில், மே மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை 'புதிய புறப்பாடு: பயணம் வழி சிங்கப்பூர் அனுபவம்' என்ற ஒரு கண்காட்சி நடக்கும்.
சிங்கப்பூரின் கடந்த 200 ஆண்டுகால பயணிகளின் வரலாற்றை அந்தக் கண்காட்சி சித்திரிக்கும்.
சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த விமான தகவல் அறிவிப்புப் பலகை அந்தக் கண்காட்சியில் ஓர் அங்கமாக இடம்பெறும். இந்த பலகை (படம்) நேற்று (ஏப்ரல் 27) அரும்பொருளக வாசலில் பொருத்தப்பட்டது.
அதைக் காண ஊடகங்கள் அழைக்கப்பட்டிருந்தன. கண்காட்சி பற்றிய மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

