துப்புரவுப் பணியாளர்களுக்கு விருந்து; பள்ளி மாணவர்களும் பங்கேற்பு

துப்புரவுப் பணியாளர்களுக்கு விருந்து; பள்ளி மாணவர்களும் பங்கேற்பு

2 mins read
1d3bd01d-e94d-4aeb-a041-5d23cd29a02d
-

கி ஜனார்த்­த­னன்

குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளின் தூய்­மை­யைக் கட்­டிக்­காக்­கும் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­க­ளைக் கெள­ர­விக்­கும் விருந்து நிகழ்ச்சி ஒன்­றில் மாண­வர்­கள் தயா­ரித்த 135 அன்­ப­ளிப்­புப் பைகள் விநி யோகிக்கப்பட்டன.

புக்­கிட் பாஞ்­சாங்­கில் உள்ள செங்­ஹுவா தொடக்­கப்­பள்­ளி­யும் ஹாலந்து- புக்­கிட் தீமா நகர மன்­ற­மும் இரண்­டா­வது ஆண்­டாக ஏற்­பாடு செய்­துள்ள 'அன்­சங் ஹீரோஸ்' நிகழ்ச்­சி­யில் 51 மாண­வர்­கள், நேற்று அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்­கியதுடன் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்களு­டன் சேர்ந்து மதிய உணவை உட்­கொண்­ட­னர்.

புக்­கிட் பாஞ்­சாங் ரிங் ரோடு புளோக் 234A-க்கு அரு­கி­லுள்ள பாங்­கிட் கோர்ட் பல பயன் அரங்­கில் நடந்த இந்­நி­கழ்ச்சி, நோன்­புப் பெரு­நாளை ஒட்­டிய ஆடல் பாடல் அங்­கங்­க­ளைக் கொண்­டி­ருந்­தது.

நிகழ்ச்­சிக்­கான ஆயத்தப் பணி­கள் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னரே தொடங்­கி­ய­தாக அப்­பள்ளி தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தது.

பள்­ளி­யின் ஒவ்­வொரு வகுப்­பும் 10 நன்­கொ­டைப் பைக­ளைத் தயா­ரித்­தன. 'மேகீ நூடல்ஸ்', பற்­பசை, பல் துலக்­கி­கள் போன்ற அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் அப்­பை­களில் நிரப்­பப்­பட்­டி­ருந்­தன.

பைக­ளைப் பெறும் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­கள் அனை­வ­ருமே புக்­கிட் பாஞ்­சாங்­கில் பணி­பு­ரி­ப­வர்­கள். அவர்­களில் 55 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள் என்­றும் 73 பேர் வெளி­நாட்­டி­னர் என்­றும் நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

மாண­வர்­க­ளு­டன் மதிய உணவு சாப்­பிட்ட துப்­பு­ர­வுப் பணி­யா­ளர் சின்­னம்மா சுந்­த­ர­ராஜு, 72, அவர்­க­ளது அன்பு வார்த்­தை­க­ளால் அக­ம­கிழ்ந்­த­தா­கக் கூறி­னார்.

"காலை 6.30 மணிக்கு வேலை செய்ய ஆரம்­பித்­தேன். களைத்­துப் போன என்னை இந்­நி­கழ்ச்சி மேலும் உற்­சா­கப்­ப­டுத்­தி­யது," என்று ஜெலாப்­பாங் வட்­டா­ரத்­தில் வசிக்­கும் திரு­மதி சின்­னம்மா கூறி­னார்.

திரு­மதி சின்­னம்­மா­வுக்கு ஏற்­பட்ட மன­நி­றைவு, நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட மாண­வர்­க­ளின் வார்த்­தை­க­ளி­லும் தென்­பட்­டது.

துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­கள் தங்­க­ளின் அனு­ப­வங்­களை வெளிப்­ப­டை­யா­கப் பகிர்ந்­து­கொண்­ட­தா­கக் கூறிய தொடக்­க­நிலை ஐந்­தாம் வகுப்பு மாணவி நந்­தனா ஸ்ரீ, 11, அவர்­க­ளுக்­குச் சமு­தா­யம் கூடு­தல் மதிப்­பைத் தர­வேண்­டும் என்­றார்.

பணி­யா­ளர் தங்­க­ளி­டம் அன்­பா­கப் பேசி­யது பிடித்­தி­ருந்­த­தா­கக் கூறிய மற்­றொரு மாணவி நிவ்ரித்தி, 11, பணி­யா­ளர்­கள் அன்­ப­ளிப்­புப் பைகளை மகிழ்ச்­சி­யு­டன் பெற்­ற­தா­கக் கூறி­னார்.

"அவர்­கள் நிகழ்ச்­சியை ரசித்து உணவை வயி­றார சாப்­பிட்­ட­தைக் கண்டு நானும் மகிழ்ந்­தேன்," என்று அவர் கூறி­னார்.