சட்டவிரோத சூதாட்டம் தொடர்பாக 76 வயது முதியவர் உட்பட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்ற செவ்வாய்க்கிழமை ஈசூன் ஸ்திரீட் 61ல் உட்லண்ட்ஸ் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சட்டவிரோத சூதாட்டங்களை நடத்தியதாகக் கூறப்படும் மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் ஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் சட்டவிரோத சூதாட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களின் வயது 51க்கும் 64க்கும் இடைப் பட்டது. இந்தச் சம்பவத்தில் அனுமதியில்லாத சூதாட்டக் கூடத்தில் இக்குற்றச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 76 வயது முதியவர் விசாரணையில் உதவி வருகிறார்.
இந்தச் சோதனையில் மூன்று கைப்பேசிகள், $10,700 ரொக்கம், சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

