இளையர்களுக்கு உதவ வேலையிடப் பயிற்சி

இளையர்களுக்கு உதவ வேலையிடப் பயிற்சி

2 mins read
0e49c500-ae47-4846-84aa-08ca482bb341
-

சிங்­கப்­பூ­ரின் இளை­யர்­கள் புதிய வேலையை வழி­காட்­டி­யு­டன் முயற்சி செய்து பார்க்கும் முன்­னோ­டித் திட்­டம் ஒன்றை என்­டி­யுசி அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இத்­திட்­டம் இவ்­வாண்­டின் இரண்­டா­வது பாதி­யில் செயல்­ப­டுத்­தப்­படும் என்று தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ் தெரி­வித்­தது.

கேரி­யர் ஸ்டார்ட்­டர் லேப் எனும் வேலை­யி­டப் பயிற்­சித் திட்­டத்­தில் தொழில்­நுட்ப கல்­விக் கழ­கம், பல­து­றைத் தொழில்­கல்­லூரி, பல்­க­லைக்­க­ழ­கப் பட்­ட­தா­ரி­கள் சேர்ந்து பய­ன­டை­ய­லாம்.

தேசிய சேவையை முடித்­த­வர்­கள், படிப்பை முடித்­த­வர்­கள் முதல் முறை­யாக வேலை­யில் சேர இத்­திட்­டம் பேரு­த­வி­யாக இருக்­கும்.

இளை­யர்­கள் அனை­வ­ரும் அவர்­க­ளுக்கு ஏற்ற நிறு­வ­னங்­களில் வேலையை முயற்சி செய்ய வாய்ப்பு வழங்­கப்­படும். அங்கு மூன்று மாத காலம் வழி­காட்­டி­யின் உத­வி­யு­டன் வேலை­யி­டப் பயிற்­சியை பெற­லாம் என்று என்­டி­யுசி தெரி­வித்­தது.

வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் புதிய முன்­னோ­டித் திட்­டத்தை தேசிய தொழிற்­சங்­க காங்­கி­ர­சின் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் அறி­வித்­தார்.

ஊழி­யர் அணி­யில் சேர விரும்­பும் இளை­யர்­க­ளுக்கு உதவ விரும்­பு­கி­றோம் என்று நிகழ்ச்­சி­யில் பேசிய திரு இங் குறிப்­பிட்­டார்.

உல­கம் முழு­வ­தும் கொவிட்-19 நெருக்­கடி காலத்­தில் வாழ்க்­கைத் தொழி­லைத் தொடங்க முடி­யாத இளை­யர்­கள் மனச்­சோர்வு அடைந்­த­னர். இத்­த­கை­யோ­ருக்கு புதிய உத்­வே­கத்தை அளிக்­கும் வகை­யில் இத்­திட்­டம் அறி­மு­கம் கண்­டுள்­ளது.

கடந்த 2022ஆம் ஆண்­டில் இளை­யர்­க­ளின் வேலை­க­ளை­யும் அவர்­க­ளு­டைய விருப்­பங்­க­ளை­யும் புரிந்­து­கொள்­வ­தற்­காக இளை­யர் பணிக் குழு ஒன்றை தொழிற்­சங்க இயக்­கம் அமைத்­தது.

இந்­தப் பணிக்­குழு இது­வரை 10,000 பேருக்கு கைகொ­டுத்­துள்­ளது.

பள்ளி மற்­றும் தேசிய சேவையை முடித்த பிறகு முதல் முறை­யாக வேலைக்­குச் சென்­ற­போது பதற்­ற­மான உணர்வு இருந்­த­தாக பல இளை­யர்­கள் கூறி­னர் என்று இளை­யர் என்­டி­யுசி நிர்­வா­கச் செய­லா­ள­ரான வெண்டி டான் தெரி­வித்­தார்.

அவர்­க­ளுக்கு எப்­படி நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த முடி­யும் என்று கேட்­ட­தற்கு தர­மான வழி­காட்­ட­லு­டன் முறை­யான பயிற்­சியை அளிக்க வேண்­டும் என்­றார்.

இதற்கு ஏற்ப முன்­னோ­டித் திட்­டம் அமைந்­துள்­ளது என்று அவர் குறிப்­பிட்­டார்.

இத்­திட்­டத்­தின்­கீழ், முழு நேர ஓராண்டு ஒப்­பந்­தத்­தின்­கீழ் மாண­வர்­கள் சேர்த்­துக்கொள்­ளப்­ப­டு­வார்­கள்.

ஏற்­கெ­னவே சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ், யுனி­குளோ, ரோல்ஸ் ராய்ஸ், சிங்­டெல், காப்­தார்ன்ஸ் கிங்ஸ் ஹோட்­டல் உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள் திட்­டத்­தில் இணைந்­துள்­ளன என்று கூறிய திரு இங், குறைந்­தது நூறு நிறு­வ­னங்­கள் இதில் சேர முன்­ வ­ரும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.

இத்­த­கைய நிறு­வ­னங்­களில் இளை­யர்­கள் புதிய வேலையை மூன்று மாதத்­திற்கு முயற்சி செய்து பார்க்­க­லாம்.

இந்­தக் கால­கட்­டத்­தில் வேலை­யைப் பொறுத்து 1,800 வெள்ளி முதல் 4,200 வெள்ளி வரை வழங்­கப்­படும்.

சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னத்­து­டன் சேர்ந்து என்­டி­யுசி, வேலை­யிட வழி­காட்­டி­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளிக்­க­வும் முடிவு செய்­துள்­ளது.